பொதிவண்டி இழுக்கும் மாட்டுக்கு முன்னால் தொங்கவிடும் புல்லுக்கட்டைப் போல சொற்களை தொங்கவிடுகிறாய்... உன் நினைவுகளை சுமந்துகொண்டே நகர்கிறது வாழ்க்கை ஏமாற்றம் உணராமல்...
நிலையில் நிற்கும் பெருந்தேரின் சக்கரங்கள் தேரோடும் வீதியை திரும்பிப் பார்ப்பதுபோல நீ திரும்ப மறுத்தாலும் எனையே நோக்கும் உன் நினைவுகள் மீண்டும் மீண்டும்...
என் உயிர்க்கலங்களின் உட்கருவினுள்ளே உயிர்த்திருக்கும் மரபணுத் தொடரில் உள்நுழைந்த உன் நினைவுகள் ஒவ்வொரு முறையும் இரட்டிக்கின்றன... ஒருபோதும் உருமாறுவதில்லை...
தூரத்தில் இருக்கும் நீயும் அருகில் இருக்கும் உன் நினைவுகளும் வேறு வேறு என்றே எண்ணுகிறாய் நீ... ஒன்றே என எண்ணுகிறேன் நான்... என்னோடு நான் பேசும் இரவுகளில்...