மின்மினிப் பூச்சிகளை விண்மீன்கள் என்று சொல்லி விற்பனை செய்கிறார்... பறக்கின்றன விண்மீன்கள் என்றே பரவசமடைகிறார்... பறப்பதில்லை விண்மீன்களென சொல்லித் திரிகிறான் பித்தன்...
இரவுப் பெருங்காற்று எழுப்பிப் பறக்கவைக்கும் உன் நினைவுகளில் ஏதோ ஒன்று என் உறக்கத்தின் விழிகளில் விழ விழிநீரென வழிகின்றன கனவுகள்... உறக்கம்தான் பாவம்... உழல்கிறது உறுத்தலில்...