எங்கோ ஓரிடத்தில் வேய்ங்குழலின் துளைகளில் வழிந்திடும் தேனிசையை செவிகளில் சேர்க்க சுமந்துவரும் காற்றைப் போலவே இந்த இரவும்... என்றோ நீ தந்த நினைவுகளை இன்றும் எடுத்துவந்து இதயத்தில் சேர்ப்பதால்...
சமயங்களில் கழுகின் கால்நகங்கள் போல கூர்மையாகின்றன உன் நினைவுகள் இரவுகளில்... இதயம் கீறி இரத்தம் வழிய பூசிக்கொள்ள உன் நினைவுகளன்றி வேறென்ன மருந்து தெரியும் எனக்கு...