பெருங்கடலின் பரப்பில் நிலைகொள்ளாமல் நகரும் கடும்புயலைப் போலவே உன் நினைவுகள்... கணிக்கவே முடிவதில்லை... எந்தப்பக்கம் கரைகடந்தாலும் சேதமாகிப் போவதென்னவோ என் உறக்கம்தான்...
தொடக்கமும் முடிவும் தெரியாத இருள்சுழலில் விழுந்தபின் விழிகள் விரித்துப் பார்த்தாலும் ஒளியின் தடமேதும் தெரியவில்லை... உறங்கக் காத்திருக்கிறேன்... என் விழிசேரும் வழி தெரியாமல் இருளில் தேடுகிறதோ உறக்கம்...??