Posts

Showing posts from February, 2022

காலம்...

 எப்போதேனும் அரும்பும் மகிழ்ச்சி மலராகும் முன்பே பெருங்காற்றை அனுப்பி வைக்கிறது காலம்...

பிழைத்திருக்கிறோம்...

 செங்காந்தளே செங்காந்தளே... துயில்பவர் செவிகளில் செய்தி சொல்... கடல் நம்மை தின்ற பின்னும் பிழைத்திருக்கிறோம்... கரப்பான்பூச்சிகள் என்ன செய்யுமென்று...

ஒட்ட மறுக்கிறது...

 என் இமைகளை விழிகளோடு உறக்கம் தடவி ஒட்ட மறுக்கிறது இரவு... உன் நினைவுகள் சொல்வதை கேட்டுக்கொண்டு...

ஒருபோதும் மறைவதில்லை...

 கார்த்திகை மாதம் கருமேகங்கள் சூழ்ந்த வானம்... காரிருள் களையும் ஒளிக்கீற்றுக்கு வழியேதும் இருக்குமாவென ஏங்கி நிற்கும்போது உதித்த ஞாயிறு ஒருபோதும் மறைவதில்லை...