நானும் நீயும் மட்டுமேயறிந்த அந்த கேள்விக்கு நீ இல்லையென்று விடையளித்தாய்... உன் உள்ளத்திற்கும் உதடுகளுக்குமிடையே உண்மை சிக்கிக்கிடப்பதை உணராமலில்லை நான்...
காலம் எப்படி உன் கைகளில் விளையாட்டு பொம்மையாகிறது... நொடிகளை யுகங்களாக இழுக்கிறாய்... யுகங்களை நொடிகளாக சுருக்குகிறாய்... இரவையும் பகலையும் இடமும் வலமும் சுழற்றுகிறாய்... எனக்குப் புரிவதேயில்லை...