Posts

Showing posts from October, 2018

உரைகல்...

தகரமா தங்கமாவென்று தந்தவரை வைத்தே தரம் பிரிக்கிறது இன்றைய உரைகல்...

இரவு...

நீந்தும் நினைவுகளை உள்ளிழுக்கும் உறக்கச்சுழல்களிலிருந்து மேலெழும் கனவுக் குமிழிகளைக் கடத்திக்கொண்டு நதியென ஓடுகிறது இரவு...

நான்...

நானில்லா நானாக நானாகும்வரை துயர் சுமப்பேன் நான்...

இரவு...

புறச்சூடு தணிக்க பொழுதெடுத்த இருள்விசிறியின் வீச்சில் அகச்சூடு தணியுமென்று ஆசையாய் இருந்த இதயத்தின் மேல் ஏமாற்றம் தெளிக்கிறது இரவு...

இரவு...

ஒளி விலகிப்போனதால் மூர்ச்சையான பகலின் இருண்ட முகத்தில் நீர் தெளிக்க நிலவுக்குடுவை எடுத்து வருகிறது இரவு...

இரவு...

இடி விழுந்த மரமென கருகிய இதயம் சூழும் துயர் நெருப்பின் மேல் விரல்கள் நீட்டுகிறது இரவு...

இரவு...

தேர் உலாவரும் தெருவெங்கும் வண்ணக்கோலங்கள் வழி நிறைப்பதைப்போல நிலவு உலவ விண்மீன்களை விண்ணில் நிறைக்கிறது இரவு...

இரவு..

நிலம் அகழும் புழுக்கள் நெகிழ்த்திய மண்ணில் பரவும் வேர்களென இருள் அகழ்ந்த வானில் பரவும் முகில்கள் தாண்டி முளைக்கிறது இரவு...

இரவு...

அறை நிரப்பும் அகில் புகையென வான் நிரப்பிய முகில் கூட்டங்கள் முத்துக்கள் சிதற எடுத்துக் கோர்க்கிறது இரவு...

மழை...

அடர் இரவின் கனத்த மௌனத்தின் மேல் சத்தமாய் பெய்கிறது மழை...