Posts

அறுவடை...

 வெறுப்பை விதைத்துவிட்டு நஞ்சை ஊற்றுபவர்கள் அன்பையா அறுவடை செய்வார்கள்...

நிரப்பிக்கொள்கிறேன்...

 இப்போதெல்லாம் உனக்கும் எனக்குமான உரையாடல்களில் குறையும் சொற்களின் அடர்த்தியை நினைவுகள் சிலவற்றால் நிரப்பிக்கொள்கிறேன்...

நீர்...

 நெருப்பைத் தொடும் முன் வெப்பத்தை விழுங்குகிறது நீர்...

வேர்களுக்கு மட்டுமே...

 நீருக்காக காத்திருக்கும் வேர்களுக்கு மட்டுமே பொழிவதில்லை மழை...

எந்தத் திசையில்...

 விழிகளை இழுத்துப்பிடித்து வேறுதிசையில் திருப்புகிறாய்... இதயத்தின் எல்லாத் திசைகளிலும் நானிருக்கும்போது எந்தத் திசையில் திருப்புவாய்...

வளைவதில்லை...

 வளைந்த பாதையில் நடக்கும்போதும் வளைவதில்லை கால்கள்...

உன் நினைவுகளை மட்டுமே...

 வளைந்த அலகால் வாரியெடுத்து நீரையும் சேற்றையும் வடிகட்டிய பிறகு மீன்களை மட்டும் விழுங்கும் பூநாரை போல இந்த இரவு உன் நினைவுகளை மட்டுமே விழுங்குகிறது...