Posts

Showing posts from November, 2018

பெய்யாதிரு மழையே..

கூரையில்லா வீடுகளில் ஈரத்தரை மேல் எரியும் அடுப்புகள் அணையும் வரையேனும் பெய்யாதிரு மழையே...

புலி...

இலையுதிர்காலத்தில் பெருமரத்தின் கீழ் காய்ந்த புற்களுக்கிடையே வரிகளுக்குள் மறைந்திருக்கிறது புலி...

இரவு...

பெருங்காற்று பிய்த்தெறிந்த சிதைந்த கூடு சுற்றும் சிறுகுருவியென மௌனமே கதறலாய் மாறிப்போன மக்களின் மேல் மழையின்றி கவிழட்டும் இரவு...

காத்திருக்கிறது காடு...

மறைந்திருக்கிறது விதை மண்ணுக்குள்... புதைந்ததென்று பேசுவார் கோடரிக்காரர்... கால்களுக்கு கீழே காத்திருக்கிறது பெருங்காடு... கண்ணற்றவர் கட்டைகள் சுமந்து சிரிக்கிறார்... விழுங்கும் காலத்திற்கு காத்திருக்கிறது காடு...

இரவு...

சூறைக்காற்று சுழற்றி எறிந்த கூரைகள் தொலைத்த சுவர்களில் வழியும் துயரின் மேல் இருள் தெளிக்கிறது இரவு...

இரவு...

பேய்க்காற்றில் வீழும் பெருமரமென விழுந்த இருளில் தூசிப்புகையென மேலெழுகிறது இரவு...

கனவுகள்...

உறக்கத்தில் கனவுகள் வருமெனக் காத்திருந்தேன் உறக்கமே கனவாகுமென உணராமல்....

இரவு...

கருப்பு நிறமெடுத்து இருட்டுச்சாயம் பூசிய பரந்த வானின்கீழ் பரவும் மேகங்கள் நிலம் நனையத் தெளிக்கும் நீரால் குளிரும் காற்றில் சிலிர்க்கிறது இரவு...

தெரிந்தே தான்...

அவர்கள் ஏமாற்றுகிறார்கள்... தெரிந்தே தான் நானும் ஏமாறுகிறேன்... ஏனெனில் அவர்கள் என் இதயத்தில் இருக்கின்றனர் நான் அவர்கள் கண்களில் நிற்கின்றேன்...

இரவு..

நிலம் தேடி ஓடிவரும் நெடுநீரின் அலைகளென இருள் தேடி பாய்கிறது இரவு...

இரவு..

முரட்டு மழை சுமக்கும் மிரட்டும் மேகங்களை விரட்டும் காற்றில் சுழல்கிறது இரவு...