Posts

Showing posts from September, 2019

மழலைகள்...

மழைநீரில் விடுகின்ற கப்பல்கள் மிதந்தாலும் கவிழ்ந்தாலும் சிரிக்கின்றன மழலைகள்...

யார் முதலில்...

ஒருகரையில் நீ... மறுகரையில் நான்... நதியென ஓடுகிறது மௌனம்... பரிசலில் யார் ஏறுவது முதலில்...

குழந்தைகளின் வழி

வீடெங்கும் சிதறிக் கிடக்கும் பொம்மைகளுக்கு தெரியும் குழந்தைகளின் வழி எதுவென்று...

மனிதர்கள்...

தலையில் தாங்கிய வார்த்தைகள் தரையில் விழுந்தபின் பாதம் மிதித்து நடக்கிறார்கள் பணம் தின்னும் மனிதர்கள்...

மனம்...

நீ உன்னை மவுனங்களால் நிரப்புகிறாய்... பாரமாகிறது என் மனம்...

வேர்கள்...

விதைகளை செடியில் விட்டு உதிரும் மலர்களின் புன்னகையில் நனைகின்றன வேர்கள்...

பணக்குளம் தேடி...

கொட்டியும் ஆம்பலுமாக ஒட்டியே இருக்கவேண்டிய கெட்டியான உறவுகள்கூட பறவைகளாகி இறக்கைகள் விரிக்கின்றன பணக்குளம் தேடி...

வாழ்க்கை...

முதல் வெயிலில் விழுகின்ற நெடுமரத்தின் நிழலென நீளும் ஆசைகள்... உச்சி வெயிலாய் தகிக்கிறது வாழ்க்கை...

வாழ்க்கை...

மனதின் காயங்களுக்கு மருந்து தேடும்போது வலிகளை பூசி நகர்கிறது வாழ்க்கை...

அலைபாய்கிறேன்...

ஈர நிலத்தில் இரை கொத்தும் சிறுகுருவியென இங்கும் அங்கும் அலைபாய்கிறேன்... உன் நினைவுகளில் நனைந்த மனதில் நடக்கும்போது...

உறங்கட்டும் மரங்கள்...

நிலத்தின் விரிசல்களை நீர்த்துளிகள் அடைக்கும்வரை விதைகளுக்குள் உறங்கட்டும் மரங்கள்...