கவிதை எழுதிய காகிதத்தில் கப்பல் செய்து மிதக்கவிட்டேன்... நகரவேயில்லை என் வாசல் தாண்டி... மழைநீருக்கு எப்படி தெரியும் என் கவிதையில் கரைந்திருப்பது நீயென்று...
உன்னை நிரப்பி வைத்த மண்பானை மனதை உடைத்துவிட்டு சிதறிக் கிடக்கும் சில்லுகளின் மேல் நடந்து செல்கிறாய்... இப்போதும் வலிக்கிறது உன் பாதங்கள் வலிக்குமென்று...