கவிதை எழுதிய காகிதத்தில் கப்பல் செய்து மிதக்கவிட்டேன்... நகரவேயில்லை என் வாசல் தாண்டி... மழைநீருக்கு எப்படி தெரியும் என் கவிதையில் கரைந்திருப்பது நீயென்று...
உன்னை நிரப்பி வைத்த மண்பானை மனதை உடைத்துவிட்டு சிதறிக் கிடக்கும் சில்லுகளின் மேல் நடந்து செல்கிறாய்... இப்போதும் வலிக்கிறது உன் பாதங்கள் வலிக்குமென்று...
இரைச்சலோடு செல்லும் இந்த வாகனங்களுக்கு யார் சொல்வது... தங்களின் சக்கரங்களுக்கு கீழே சமாதியாகியிருக்கின்றன வளர்ந்த மரங்களும் வண்ணப்பறவைகளின் கூடுகளுமென்று...
மது விற்பவன் கடவுளாகிறான்.... மருந்து தருபவன் சாத்தானாகிறான்... போதை கவிழ்க்க எழும் விரல்கள் ஏணிகளாகின்றன... பாதை காட்ட நீளும் விரல்கள் பாம்புகளாகின்றன... போதை அடிமைகளுக்கு புண்ணியமென்பது போதை மட்டுமே...