Posts

Showing posts from May, 2022

அறுவடை...

 வெறுப்பை விதைத்துவிட்டு நஞ்சை ஊற்றுபவர்கள் அன்பையா அறுவடை செய்வார்கள்...

நிரப்பிக்கொள்கிறேன்...

 இப்போதெல்லாம் உனக்கும் எனக்குமான உரையாடல்களில் குறையும் சொற்களின் அடர்த்தியை நினைவுகள் சிலவற்றால் நிரப்பிக்கொள்கிறேன்...

நீர்...

 நெருப்பைத் தொடும் முன் வெப்பத்தை விழுங்குகிறது நீர்...

வேர்களுக்கு மட்டுமே...

 நீருக்காக காத்திருக்கும் வேர்களுக்கு மட்டுமே பொழிவதில்லை மழை...

எந்தத் திசையில்...

 விழிகளை இழுத்துப்பிடித்து வேறுதிசையில் திருப்புகிறாய்... இதயத்தின் எல்லாத் திசைகளிலும் நானிருக்கும்போது எந்தத் திசையில் திருப்புவாய்...

வளைவதில்லை...

 வளைந்த பாதையில் நடக்கும்போதும் வளைவதில்லை கால்கள்...

உன் நினைவுகளை மட்டுமே...

 வளைந்த அலகால் வாரியெடுத்து நீரையும் சேற்றையும் வடிகட்டிய பிறகு மீன்களை மட்டும் விழுங்கும் பூநாரை போல இந்த இரவு உன் நினைவுகளை மட்டுமே விழுங்குகிறது...

சிலையானது கல்...

 நெடுங்காலம் காத்திருந்தபின் சிலையானது கல்...

வழிமறிக்கிறாய் நீ...

 உள்ளம் உதிர்க்கும் சொற்களையெல்லாம் குரல்வளையில் வழிமறிக்கிறாய் நீ... தேங்கிய சொற்கள் வழியறிந்து விழிவழியே வெளியேற ஒவ்வொன்றையும் வாசிக்கிறேன் நான்...

மெல்லக் கரைகிறது இரவு...

 காலக் கலயத்தின் சிறுதுளை வழியே நாளொன்று நிரப்பிவைத்த இருள் துளித்துளியாய் வழிய மெல்லக் கரைகிறது இரவு...

ஒவ்வொரு இரவிலும்...

 திருவிழா இரவில் இருளைத் தின்னும் மின்விளக்குகளென உறக்கம் தின்கின்றன உன் நினைவுகள்... ஒவ்வொரு இரவிலும்...

மரங்கள்...

 கடும் வெயிலிலும் நிழல் தேடுவதில்லை மரங்கள்...

உணரவே முடிவதில்லை...

 பச்சோந்தி போலவேதான் இந்த இரவுகளும்... உன் நினைவுகளுக்கு ஏற்றவாறு நிறம் மாறுகின்றன... உணவாகும்வரை உணரவே முடிவதில்லை உறக்கத்தால்...

மழையல்ல... மகிழ்ச்சி...

 விதைத்துவிட்டு விழிகள் குறுக்கி வானம் பார்க்கும் விவசாயிமேல் மேகங்கள் பொழிவது மழையல்ல... மகிழ்ச்சி...