Posts

Showing posts from 2021

திறக்கிறது பகல்...

 காலம் வானத்தைக் கதவாக்குகிறது... இருள் கொண்டு பூட்டுகிறது இரவு... ஒளி வைத்து திறக்கிறது பகல்...

காத்திருக்கிறேன் நானும்...

 சிறுதூறல்களுக்கு ஊடாக உலவும் மென்குளிர் காற்றோடு காத்திருக்கிறது இரவு... குடிப்பதற்கும் கொறிப்பதற்கும் உன் நினைவுகளை எடுத்துவைத்து காத்திருக்கிறேன் நானும்...

இனிப்புகள் இனிப்பதில்லை...

 கசப்புகள் அத்தனையும் மென்று விழுங்கியபின் கொடுக்கப்படும் இனிப்புகள் இனிப்பதில்லை...

உன்னை மட்டுமே...

 திரும்ப இயலா பயணம் தொடங்கும்முன் நினைவுகளை திரும்பிப் பார்க்கும்போது திரும்பிச் செல்லத் தோன்றும் கணங்களெல்லாம் உன்னை மட்டுமே சுமந்து கொண்டிருக்கின்றன...

வேடிக்கை பார்க்க பழகுகிறேன்...

 சுக்கான் உடைந்த கலத்தின் மீகாமனாக நான்... கடல் நீரோட்டமும் காற்றுமாக காலம்... அலைகளை வெறித்துப் பார்க்காமல் வேடிக்கை பார்க்க பழகுகிறேன்...

செங்கழனியாக இரவு...

 நீ புன்னகைகளை விதைத்து செல்கிறாய்... நான் கனவுகளை அறுவடை செய்கிறேன்... செழிப்புமாறா செங்கழனியாக இரவு...

உன் நினைவுகளால் நிறையும்போது...

 வானம் மைபூசிக்கொண்ட இரவொன்றில் ஆயிரம் அகல்கள் ஒளிரும் முற்றமென மாறிப்போகிறது என் நெஞ்சம்... உன் நினைவுகளால் நிறையும்போது...

தவிக்கிறது நெஞ்சம்...

 பசித்திருக்கும் குஞ்சுகள் கூட்டில் தனித்திருக்க இரைதேடி பறக்கும் தாய்ப்பறவையென தவிக்கிறது நெஞ்சம்... உன் நினைவுகளில் ஒன்றிரண்டு மறந்தபோது...

நகர்கிறது இரவு...

 நீர்கசியும் பாறைமீது நிதானமாக ஏறும் நத்தையென உன் நினைவுகளில் நகர்கிறது இரவு...

மாட்டிக்கொள்கிறது என் உறக்கம்...

கதண்டு கூட்டில் கல்லெறியும் சிறுவனைப் போல உன் நினைவுகளை உசுப்புகிறது இந்த இரவு... விவரமறியா வழிப்போக்கனாக மாட்டிக்கொள்கிறது என் உறக்கம்...

எப்படியென்றே விளங்கவில்லை...

உறங்கும்போது காணுகின்ற கனவுகளில் பல விழிக்கும் முன்பே விழிகளுக்குள் கரைந்துவிட உன்னை சுமந்து வரும் கனவுகள் மட்டும் நினைவுகளுக்குள் ஒட்டிக் கொள்வதுதான் எப்படியென்றே விளங்கவில்லை...

தள்ளி வையுங்கள்...

கடும் வெயில் தாங்கி கனமழை தாங்கி பெருங்காற்று தாங்கி பிழைத்திருக்கிறது பனை... தள்ளி வையுங்கள் கொலைவாளை...

வேறெதுவும் தெரிவதில்லை...

தேன் நிரம்பிய குடுவையில் விழுந்துவிட்ட தனித்த எறும்பென ஆகிறேன் நான் உன் நினைவுகளில் விழும்போது... திகட்டும்வரை பருகியபின் மூழ்கும்போதும் இனிப்பைத் தவிர வேறெதுவும் தெரிவதில்லை...

கடைசி மூச்சு...

 எரியும் காடு அணையும்போது மேலெழும் புகைமூட்டத்தில் கலந்திருக்கிறது கருகிய மரங்களின் கடைசி மூச்சு...

உன் நினைவுகளைப் பார்க்கும்போது மட்டும்...

இந்த இரவு ஏனோ உருப்பெருக்கும் கண்ணாடியாக மாறிப்போகிறது உன் நினைவுகளைப் பார்க்கும்போது மட்டும்...

கல்லாகவே இருக்கும் கல்...

 கல்லில் கால் இடிப்பார்... காலில் கல் இடித்ததென்று கதை சொல்வார்... கல்லாகவே இருக்கும் கல்...

நானென்ன செய்ய இயலும்...

பகலில் இருந்து நழுவிய பொழுதுகள் இரவில் விழுந்த பின் பழகிய ஒளிக்கு வழிதேட என்னிடமிருக்கும் உன் நினைவுகளில் கொஞ்சம் இரவல் தருவதைத் தவிர நானென்ன செய்ய இயலும்...

எப்படி கடக்கும்...

 எனது பகல்களை கொய்து உன் கூந்தலில் சூடிக்கொள்கிறாய்... எனது இரவுகளை எடுத்து உன் விழிகளுக்கு பூசிக்கொள்கிறாய்... இப்படியிருக்க நாட்கள் என்னை எப்படி கடக்கும்...

காத்திருக்கிறேன் நான்...

நீருக்குள் அமிழ்ந்து இரைக்காகக் காத்திருக்கும் முதலையென நெஞ்சுக்குள் ஒளிந்திருக்கும் உன் நினைவுகள்... இரையாக என்னைக் கவ்வி இருளுக்குள் சுழற்றியடித்து துகள்களாக பிய்த்த பின்னும் இன்னுமோர் இரவுக்காக காத்திருக்கிறேன் நான்...

உயிர்ப்புடனே இருக்கிறது...

 அடைமழை பொழியும் இரவில் அனைத்தும் உறையும் குளிரில் அடுப்படி மூலையில் சுருண்டு கிடக்கும் பூனை போலவே உன் நினைவும்... ஒடுங்கி இருந்தாலும் உயிர்ப்புடனே இருக்கிறது...

தெரியவில்லை...

 குறைந்த கால இடைவெளியில் கொட்டித் தீர்க்கும் பெருங்கனமழையை தாங்கி நிற்கும் மேகத்தைப் போலவே நீ... பொழியும்போது இந்த இரவு தாங்குமா எனத் தெரியவில்லை...

பூக்கள்...

 புழுதிக்காற்று கடந்து செல்லும் நேரத்திலும் புன்னகைக்கவே செய்கின்றன பூக்கள்...

ஒவ்வொரு இரவிலும் நிறைகிறது...

 நித்தமும் தேன் சுரக்கும் உன் நினைவுப்பூக்கள்... ஒற்றைத் தேனீ கட்டும் தேனடை ஒவ்வொரு இரவிலும் நிறைகிறது...

நீ இருக்கும் இடத்தை வைத்தே...

 தொலைவு அணுக்கம் ஆகிய சொற்களின் பொருள் நீ இருக்கும் இடத்தை வைத்தே நிர்ணயிக்கப் படுகிறது...

கற்பாறை...

 நில்லாமல் நீரோட வழவழப்பாகிறது கற்பாறை...

போதை குறைவதில்லை...

 பனங்கள் பழங்கள்ளாக மாறும்போது ஏறுகின்ற புளிப்பைப் போலவே உன் நினைவுகளும்... காலங்கள் கடந்தாலும் போதை குறைவதில்லை...

உணர்வதில்லை...

 அடுத்தடுத்துக் கிடக்கும் சில்லறைகளின் அடியொற்றி நடக்கும் கால்கள் உணர்வதில்லை கற்களையும் முட்களையும்... கால்கள் வலியுணரும்போது கைக்கெட்டும் தூரத்தில் காசுகள்... காத தூரத்தில் மருந்துகள்...

எதேச்சையானதல்ல...

 கருப்பும் வெள்ளையும் தவிர ஏனைய நிறங்கள் எல்லாம் காணாமல்போன கனவொன்றில் என் காதருகில் நீ சொல்லியதாகத் தோன்றிய சொற்களை அதன்பிறகு எப்போது கேட்டாலும் எல்லா நிறங்களும் என்மேல் ஒட்டிக்கொள்வதொன்றும் எதேச்சையானதல்ல...

கடவுளைக் காணவில்லை...

 "யார்" எனக் கேட்டார்... "நான்" எனச் சொன்னேன்... கடவுளைக் காணவில்லை...

வேறென்ன நான் சுவாசிக்க முடியும்...

 விடாது பொழியும் அடைமழையைத் தொடர்ந்து சரியும் நிலம்போல சடசடவென என்மேல் சரியும் உன் நினைவுகளில் சிக்கிக்கொண்டபின் உன் நினைவுகளைத்தவிர வேறென்ன நான் சுவாசிக்க முடியும்...

அறியாப் பிள்ளைபோல...

 நூலறுந்த பட்டத்தின் பின்னால் ஓடும் அறியாப் பிள்ளைபோல நானும் ஓடுகிறேன் உன் பின்னால்... கையிலிருக்கும் நூல்கண்டாக உன் நினைவுகளுடன்... பெருங்காற்றென சுழன்றடிக்கிறது காலம்...

அளவாகப் பொழியும்வரை...

 அளவாகப் பொழியும்வரை அழகாகவே இருக்கிறது இந்த மழை...

நேரெதிர் நிற்க...

 இரவின் செறிவை இருளால் அளக்க நினைத்தேன்... நிலவும் விண்மீன்களும் நேரெதிர் நிற்க உன் நினைவால் அளந்தேன்... அடர்வு மிகுந்தேதான் இருக்கிறது இரவு...

நீயே நிறைகிறாய்...

உன்னைக் கொஞ்சம் களவு செய்து என் இரவுகள் நிறைய நிலவுகள் செய்தேன்... ஒளியென நினைவுகள் பொழிகிறாய்... உயிரினில் நீயே நிறைகிறாய்...

எண்ணங்கள்...

 எனக்குள் என்னைத்தேடி ஏதும் காணாமல் திகைத்து நிற்க எனக்குள் என்னைத் திணிக்கின்றன எண்ணங்கள்...

கனவுகளின் பெருவெள்ளம்...

 அடைமழையின் தூறல்களென அடுத்தடுத்து பொழியும் உன் நினைவுகள்... இரவின் கரையுடைத்துப் பாய்கிறது கனவுகளின் பெருவெள்ளம்...

பெருமரக் கனவுகளுடன்...

மண்மூடி கிடந்தபோதும் மலைக்காமல் காத்திருந்து மழைத்துளி தழுவியதும் வேர்ப்பிடித்து எழுகிறது விதை பெருமரக் கனவுகளுடன்...

ஏன் முகத்தில் காட்டுகிறாய்...

நிலத்திற்குள் எங்கோ நிறைந்திருக்கும் நீர்போல உனக்குள் நான் ஒளிந்திருக்க வறட்சியை ஏன் முகத்தில் காட்டுகிறாய்...

சலனமின்றி இருக்கிறது உள்ளம்...

பொய்யுரைக்க புகழும் உலகம் மெய்யுரைக்க இகழும்வேளை புகழ்ச்சியும் இகழ்ச்சியும் உதிரும் உடலுக்கென சலனமின்றி இருக்கிறது உள்ளம்...

வேகாத பானையில்...

வேகாத பானையில் நீர் நிரப்பச்சொல்லி நம்மை தினமும் வேகவைக்கிறது வாழ்க்கை...

பண்படுத்ததான்...

தனைக் கீறும் கலப்பை நுனி பண்படுத்ததான் புண்படுத்த இல்லையென விளங்க இயலா நிலத்திலேதும் விளைவதில்லை...

சிறுபிள்ளையென...

சிறுகச்சிறுக சேர்த்து வைத்த உண்டியலைத் திறந்து பார்க்கும் சிறுபிள்ளையென முகம் மலர்கிறது உன் நினைவுகளின் பேழை திறக்கும் என் உறக்கம்...

பழிசுமக்கிறது கண்ணாடி...

உருவம் பார்க்க வாங்கிய கண்ணாடியை உடைத்துவிட்டு உருவம் காட்டுவதில் ஒழுங்கில்லையென குறைசொல்ல பதிலேதும் சொல்லாமல் பழிசுமக்கிறது கண்ணாடி...

உன்னுள்...

பேரூழிக்காலத்தின் பெருமழையென என்னில் பெய்கிறாய்... மிதந்தால் உன்னில்... மூழ்கினால் உன்னுள்...

உறங்குவதில்லை...

இலைகளும் மலர்களும் இரவில் உறங்கும்போதும் உறங்குவதில்லை வேர்கள்...

ஏனோ தெரியவில்லை...

என் இரவுகளின் நொடிகள் மட்டும் ஏனோ தெரியவில்லை வட்டப்பாதையில் நகர்கின்றன... ஒவ்வொரு நொடியின் தலையிலும் உன் நினைவுகளில் ஒன்றை ஏற்றி அனுப்புகிறேன்... விடிவதற்குள் அத்தனையும் என்னிடமே வந்து இறக்கி வைத்துவிட்டு செல்கின்றன...

பதித்துச் செல்கிறாய்...

என்மேல் கவிழும் இரவு என்மேல் இருள் பூசுவதில்லை... என்மேல் பொழியும் நிலவு என்னில் ஒளி கூட்டுவதில்லை... நீயோ கவிழ்வதுமில்லை பொழிவதுமில்லை... ஆனாலும் பதித்துச் செல்கிறாய் உன் நினைவுகள்...

அலையடிக்கும் கனவுகள்...

மணல்வெளியாய் மாறிப்போன நதியாக நான்... பெருமழைக்குப் பிறகான வெள்ளமென உன் நினைவுகள்... இரவின் கரைகளில் அலையடிக்கும் கனவுகள்...

எப்போதுமே இப்படித்தான்...

 நொடிக்கொருமுறை உருமாறும் மேகங்களென உன் நினைவுகள்... இரவுக்காற்று எப்போதுமே இப்படித்தான்...

விளையாடுகிறது காலம்...

 கட்டப்பட்டுதான் இருக்கிறது கயிறு... கழுத்தில் ஒருமுனை... கல்லில் மறுமுனை... மேய்கிறேன் நான்... கயிற்றில் முடிச்சுகள் போட்டு விளையாடுகிறது காலம்...

கஞ்சனாகிறேன்...

 பகலில் தொடங்கிய மழை இரவிலும் விடாது தொடர நடுங்கும் இருள் உன் நினைவுகளை இரவல் கேட்கும்போது ஏனோ நான் கஞ்சனாகிறேன்...

இந்த இரவும் கழிகிறது...

 எப்போதோ நீ சிந்திய புன்னகையை ஏதோவொரு நினைவுக்குள் பொதிந்து எங்கேயோ வைத்துவிட்டேன்... எங்கேயென்று தேடுவதிலேயே இந்த இரவும் கழிகிறது...

இலக்கு எப்போதும்...

 நாணிலிருந்து விடுபடும் அம்புகளாகும் உன் நினைவுகளின் இலக்கு எப்போதும் நானாகிறேன்...

எதிரெதிர் துருவங்களில்...

 என் நினைவுகளின் அடுக்கிலிருந்து ஒன்றை எடுத்து உன்னை தூசி தட்டுகிறேன்... இயல்பும் நினைவும் எதிரெதிர் துருவங்களில்...

தூறல்களாக...

 இந்த மழைகூட உன்னைப்போலதான்... பொழிவதா வேண்டாமா என தயங்கியபடியே விடாமல் பெய்துகொண்டே இருக்கிறது தூறல்களாக...

குளிர் சுமக்கும் காற்று...

 இருளில் பெய்யும் மழையை இமைகளுக்குள் எடுத்து வருகிறது குளிர் சுமக்கும் காற்று...

வேறென்ன செய்வது..

 முழுஇருளுக்குள் மூச்சுத்திணறும்போது ஒளிக்கீற்றுகளுக்கான வழிகள் தேடும் விழிகளை விரல்களே குத்திவிட்ட பிறகு இருளுக்குள் கரைவதைத் தவிர வேறென்ன செய்வது..

யோசிக்கிறது உலகம்...

 மெத்தையின்மீது விரிப்பொன்றை விரிப்பது போல வானப் படுக்கையில் இருள் விரிக்கிறது இரவு... எப்படி உறங்குவதென யோசிக்கிறது உலகம்...

தீருவதேயில்லை..

 பிரிந்தபின் புரிகின்ற தீராப் பெருங்காதல் இணையும் வாய்ப்பு இல்லையென்று புரிந்தபின்னும் தீருவதேயில்லை..

நீயில்லா வாழ்வு...

 நிலவில்லா வானமென்றே நினைத்திருந்தேன்... இப்போதுதான் புரிகிறது நீரில்லா உலகென்று... நீயில்லா வாழ்வு...

நடந்து நடந்து...

நடந்து நடந்து களைத்த கால்கள் நகர முடியாமல் முள்வெளியில் நிற்கும் வேளையில் கடந்து வந்த புல்வெளிகளும் பூங்காக்களும் கண்களை நிறைக்க குருதி வழியும் கால்களோடு முடிகிறது பயணம்...

எதை வைத்து திரையிடுவாய்...

 இப்போதெல்லாம் உன் காட்சிப்புலத்தில் நானிருப்பதை உன் கண்கள் விரும்புவதில்லை... உன் பேச்சின் பொருளாக நானிருப்பதை உன் உதடுகள் பொறுப்பதில்லை... இருந்துவிட்டுப் போகட்டும்... விழிகளிலும் மொழிகளிலும் விடுபட்ட என்னை நினைவுகளாக ஏந்திவரும் இரவுக்கு எதை வைத்து திரையிடுவாய்...

வேடிக்கை பார்க்கிறது வாழ்க்கை...

 தண்ணீரில் துள்ளும் மீனாக இருந்த என்னை வெந்நீரில் வேகும் மீனாக்கி வேடிக்கை பார்க்கிறது வாழ்க்கை...

பலியாகிப் போவதென்னவோ...

 தூங்கும் புலியை இடறிச் செல்லும் கால்களென உன் நினைவுகளை இடறிச் செல்லும் இரவுகள்... பாவம் பலியாகிப் போவதென்னவோ அப்பாவி உறக்கம்தான்...

என்னை வைத்து விளையாடுகிறது...

 பொம்மை வைத்து விளையாடும் சிறுகுழந்தையென என்னை வைத்து விளையாடுகிறது உன் நினைவு...

விடியல் எனக்கில்லை...

 உன் முகம் பார்க்காமல் உறங்கும் இரவுக்குப் பிறகான விடியல் எனக்கில்லை...

கரைகிறது இரவு...

 உருகும் பனியைப்போல கரைகிறது இரவு... உன் நினைவுகளின் வெப்பத்தில்...

வானம் பார்க்கின்றன...

 அனலெனத் தகிக்கும் வெயிலில் காயும் மணல்வெளியில் நடக்கிறேன்... இருளடைந்த விழிகளில் சலனங்கள் ஏதுமில்லை... கால்கள்தான் மேகங்கள்தேடி வானம் பார்க்கின்றன...

வெண்மையாக இருக்கட்டும்...

 கற்பனை மரமெங்கும் கவலைக் கரையான்கள்... இறக்கும் தருவாயில் எழுதுகோல்... வரிகளேதும் படராமல் படபடக்கும் வெற்றுக் காகிதமேனும் வெண்மையாக இருக்கட்டும்...

வசப்படவில்லை வழக்கம்போல...

சுருள் சுருளாக உன் நினைவுகள்... சுற்றிச் சுற்றி வருகிறேன் நான் புதிரின் நடுவே நிற்பவன் போல... அருகிலேயே இருக்கும் விடையென நீ... வழிகள்தான் வசப்படவில்லை வழக்கம்போல...

இருள்கொட்டி செல்கிறது இரவு...

இரைதேடி நகரும் எறும்பொன்று எல்லாப் பக்கங்களிலும் நுகர்வதுபோல திசைகளனைத்திலும் இருள்கொட்டி செல்கிறது இரவு...

தண்ணீரென நான்...

நிலையில்லா நிலவு பார்த்து முறுவலிக்கும் அல்லி மலரென நீ... சலனமின்றி தாங்கி நிற்கும் தண்ணீரென நான்...

நகர முடியாமல்...

 இரை விழுங்கும் பெரும் பாம்பென மெல்ல மெல்ல பகல் விழுங்கியபின் நகர முடியாமல் கிடக்கிறது இரவு...

நீரூற்ற ஏனோ மறுக்கிறாய்...

சொற்களில் வெப்பம் தோய்த்து வீசுகிறாய்... என் இதயம் கருகும் வாசனை நுகர்ந்த பின்னும் நீரூற்ற ஏனோ மறுக்கிறாய்...

நீயன்றி வேறேது...

உன் நினைவுகளைக் குழைத்துக் கட்டிய இரவுமாளிகையில் எப்போதும் எரியும் ஒளிவிளக்கு நீயன்றி வேறேது...

விழலுக்கு இறைக்கும் நீர்...

நெஞ்சத்தில் ஏற்றிவைத்து கொண்டாடுவோர்க்கு அளந்தளந்து ஊற்றப்படும் அன்பு கொஞ்சமும் மதிக்காதோரிடம் கொட்டப்படுகிறது... விழலுக்கு இறைக்கும் நீர்...

எங்கே ஒளித்து வைப்பாய்...

 சொற்களை தொண்டைக்குழியில் வைத்துவிட்டு மௌனங்களால் மூடுகிறாய்... இரவுகளில் கனவுகள் வளர்ந்து பூக்கும் பூக்கள் உன் உறக்கத்தை சுற்றிலும் உதிர்ந்து கிடப்பதை காலையில் எங்கே ஒளித்து வைப்பாய்...

விழிக்கவே மனமில்லை...

உன் முகம் காண விழிகள் மூடினேன்... விடியலில் உறக்கம் கலைந்த பின்னும் விழிக்கவே மனமில்லை...

ஓடையாகிறது இரவு...

அணைதேங்கிய நீரெல்லாம் மடை கண்டதும் பாய்வதுபோலவே உன் நினைவுகளும்... ஓடையாகிறது இரவு...

பிறகெப்படி...

சுழலி சுழல் நீ சுழல்கிறேன்... குழலி குழல் நீ இசையாகிறேன்... அனலி அனல் நீ எரிகிறேன்... புனலி புனல் நீ கரைகிறேன்... இத்தனைக்கும் பிறகெப்படி மிச்சமிருப்பேன் நான்...

ஏமாற்றங்கள் சுமக்கும் வாழ்க்கை...

எதிர்பார்ப்புகளின் இறுதிப் பயணத்தில் தொடங்குகிறது ஏமாற்றங்கள் சுமக்கும் வாழ்க்கை...
 நீ நான்... நீலம் வானம்... ஒளிரும் பகல் வாழ்வு... கருமேகங்களிடம் யார் இதைச் சொல்வது....

உன் நினைவுகளோடு நான்...

 மொழிகளுக்கான வழிகளை நீ மூடிவிட்ட பிறகு காற்றோடு கதைகள் பேசி களித்திருக்கும் பித்தனென உன் நினைவுகளோடு நான்...

விண்ணில் பறக்கிறேன் நான்...

வெள்ளைப் புறாவின் இறக்கைகள் விழிகளுக்குள் விரிய விண்ணில் பறக்கிறேன் நான்...

பொழிகின்றன என்மீது...

கண்ணிமைகளுக்குள் என்னை வைத்து வெண்பஞ்சு மேகங்களைத் தூதனுப்புகிறாய்... நீரில்லையெனினும் உன் நினைவுகளை சுமந்துவந்து பொழிகின்றன என்மீது...

இரவுகளும் பகல்களும்....

 உன் விழிகள் வீசிச்செல்லும் புன்னகையில் நகரமுடியாமல் ஒட்டிக்கொள்கிறேன் நான்... என்னை சுற்றி வருகின்றன இரவுகளும் பகல்களும்....

சத்தமின்றி நுழைகிறது...

 சமையலறைக்குள் புகுந்த பூனையென உன் நினைவு சத்தமின்றி நுழைகிறது என் இரவில்... கடகடவென உருளும் பாத்திரங்களாக கனவுகள்...

கலைகிறது உறக்கம்...

சிறு தூறல்களில் நனைந்து குளிரும் இரவில் சிலிர்க்கும் உன் நினைவுகள் சிதறும் கனவுத் துளிகளில் கலைகிறது உறக்கம்...

இரவில் நுழைகிறது கனவாக...

முட்டைக்கு உள்ளிருந்து முட்டுகின்ற பறவைக்குஞ்சென இதயம் தட்டும் உன் நினைவு... உடையாத இதயத்தை ஊடுருவி இரவில் நுழைகிறது கனவாக...

நாணுமோ நிலவு....

 ஒதுங்குகிறாய்... ஒளிந்து கொள்கிறாய் முகிலுக்குள் முகம் மறைக்கும் முழுமதிபோல... நிலம்காண நாணுமோ நிலவு....

சுமையாகிப் போகின்றன...

சுற்றும் சக்கரங்கள் தூரம் கடக்கின்றன... சோர்ந்த சக்கரங்கள் சுமையாகிப் போகின்றன...

என்ன செய்வாய்...

விழிகளிலிருந்து நழுவுகிறாய் நீ விரல்களுக்கிடையே நழுவும் காற்றைப்போல... நான் சுவாசிக்கும்போது என்ன செய்வாய்...

களிம்புகள் என்னசெய்யும்...

 காயத்தின் காயங்களை களிம்புகள் ஆற்றும்... காலம் செய்யும் காயங்களை களிம்புகள் என்னசெய்யும்...

எப்போது கூட்டிச் செல்வாய்...

 கடந்து செல்லும்போது பாராதது போலவே நடந்து செல்கிறாய்... பாசாங்கு போதும் இங்கேயே நிற்கும் உன் இதயத்தை எப்போது கூட்டிச் செல்வாய்...

களைப்பு உணர்வதில்லை...

 கனி உண்ணும் பறவைகளைத் தாங்கும் கிளைகள் களைப்பு உணர்வதில்லை... களிப்பு உணர்கின்றன...

இத்தனை புரவிகள் போதாதா...

சிறு புன்னகை சில கையசைப்புகள் பேசும் விழிகள் வீசும் மொழிகள்... இத்தனை புரவிகள் போதாதா இந்த இரவை இழுத்துச்செல்ல...

வேறென்ன செய்யமுடியும்...

 கனத்த மலைப்பாம்பு கொழுத்த இரையை வளைத்துப் பிடிப்பதுபோல என் உறக்கம் நெரிக்கும் உன் நினைவுகள்... விழித்திருந்து வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறென்ன செய்யமுடியும் என்னால்...

தயக்கத்தில் வாழ்க்கை...

 பயணிக்கும் பாதைகளின் கதவுகளை பூட்டிவிட்டு சாவிகளைத் தொலைக்கிறது காலம்... திறப்பதா உடைப்பதா தயக்கத்தில் வாழ்க்கை...

பொருளற்றுப் போகின்றன...

தொலைவுகள் பொருளற்றுப் போகின்றன... உன் நினைவுகளோடு பயணிக்கும் நெடுந்தூரப் பயணங்களில்...

பார்வையாளர்களாக...

 உருளும் பந்து என் உறக்கம்... ஓயாமல் உதைக்கும் கால்கள் உன் நினைவுகள்... இரவின் எல்லைகளுக்குள் எப்போதும் விளையாட்டு... அத்தனை கனவுகளும் பார்வையாளர்களாக...

எத்தனை நேரம்தான்...

 பசித்த வயிறும் புசிக்கத் துடிக்கும் வாயுமாக வேட்டைவிலங்கென பாயும் உன் நினைவுகள்... பாவம் இரவின் அடர்இருளில் எத்தனை நேரம்தான் ஒளிந்திருக்கும் என் உறக்கம்...

நினைவுகளின் கரங்கள்...

 விழிகளின் ஓரம் வழிகின்ற ஈரம் கன்னங்கள் உணர்வதற்குள் துடைக்க நீளும் நினைவுகளின் கரங்கள்...

உளியின் வலியை...

 சின்னஞ்சிறு சுத்தியலும் சிரிக்கும் சிலையும் உணர்வதில்லை செதுக்கிய உளியின் வலியை...

பாவம் என் உறக்கம்...

 ஒளிக்கதிர்களென உன் நினைவுகள் ஓயாமல் பாய்கின்றன... இந்த இரவு மட்டுமேனோ குவியாடி ஆகிப்போகிறது... பாவம் என் உறக்கம்...

ஞாலத்தில் பறவைகள்...

 இறக்கைகள் இருக்கின்றன என்பதற்காக ஞாயிறு நோக்கி பறப்பதில்லை ஞாலத்தில் பறவைகள்...
 எனக்குள் என்னைத்தேடி இல்லாமல் திகைத்துநிற்க எங்கே தொலைத்தாயோ அங்கேயே தேடென்றது ஒரு குரல்... உனக்குள் தேடித்தேடி ஒளிந்திருந்த என்னைக் கண்டேன்...

நகர்கிறது இரவு...

 இறகுகள் உதிர்த்த ஈசலொன்று வெறுந்தரையில் திசைதெரியாமல் ஊர்வதுபோல இருளுக்குள் நகர்கிறது இரவு...

கரைவதில்லையென அறியாமல்...

 உன்னெதிரில் நான் நிற்க இமைகளை மூடிக்கொள்கிறாய்... உன்னிடத்தில் நான் வினவ இதழ்களை மூடிக்கொள்கிறாய்... விழிகளுக்கும் மொழிகளுக்கும் திரை போடுகிறாய்... கழுவுவதால் கற்சிலையென்றும் கரைவதில்லையென அறியாமல்...

அதனை உணர்வார்...

 அதனில் இருந்து அதனையே தேடுவார் அதனையறியாமல் எதனிடம் உள்ளதென்று ஏதேதோ சிந்திப்பார்... அதனில் அமிழ்ந்து அதனில் கரைந்து அதுவாகவே மாறுவார் அதனை உணர்வார்...

எட்டிப்பார்க்கிறது இரவு...

 சிறு சுவரின் பின்னிருந்து நான் பார்க்காத நேரத்தில் என்னைப் பார்க்கும் உன்னைப் போலவே இருளுக்குளிருந்து எட்டிப்பார்க்கிறது இரவு...

விழிக்கிறது இரவு...

 பெருங்காற்றில் சீறித் தெறிக்கும் சிறு தூறல்கள் இருள் முகத்தில் அறைய விழிக்கிறது இரவு...

விலகியபின் மறைகிறேன்..

 மாலை வானம் நான்... மஞ்சள் வெயில் நீ... உறையும்வரை நிறைகிறேன்... விலகியபின் மறைகிறேன்..

விரிதலுமில்லை ஒடுங்கலுமில்லை...

 உள்ளிருந்து வெளி நோக்க விரிகிறது... வெளியிலிருந்து உள் நோக்க ஒடுங்குகிறது... விரிதலும் ஒடுங்கலும் உணர்ந்தபின் விரிதலுமில்லை ஒடுங்கலுமில்லை...

மறப்பதில்லை பூக்கள்...

 இனிப்பில்லா இலைகளுக்கிடையே மலர்ந்தாலும் இதழ்களுக்குள் தேன் வைக்க மறப்பதில்லை பூக்கள்...

சிதையாமல் காப்போம்...

 உயிர்களைக் கொடைதந்து மீட்டெடுத்த உரிமைகள் காக்க உறுதியேற்போம்... செந்நீர் பாய்ச்சி வளர்த்த செடியை சிதையாமல் காப்போம்...

புறம் மிளிர பொன்னாகும்...

 உள்ளுணர ஒளி பெருகும்... ஒளி பெருக உள்ளொளிரும்... உள்ளொளிர புறம் மிளிரும்... புறம் மிளிர பொன்னாகும்...

உதடுகள் மூடிக்கொள்ளும்..

 உள்ளதை உள்ளம் அறியும்... உள்ளதெல்லாம் உள்ளம் அறிந்தபின் உதடுகள் மூடிக்கொள்ளும்..

கடலும் நீ.. கரையும் நீ...

 உன் நினைவுகளின் பேரலைகளின் மேல் நீர்ச்சறுக்கு விளையாடுகிறேன்... கடந்தாலும் கவிழ்ந்தாலும் உன்னிடத்தில்... கடலும் நீ கரையும் நீ...

மிஞ்சுவது கரி மட்டுமே...

 நெருப்பென வெறுப்பள்ளி வீசுபவர்கள் வீசட்டும்... நெருப்பொன்றும் நிரந்தரமல்ல... நெருப்பணைந்தபின் அங்கே மிஞ்சுவது கரி மட்டுமே...

கலைகிறது கனவு...

 என் விரல்களோடு உன் விரல்கள் கோர்த்து சிறுதூரம் செல்லும்முன் கடந்து செல்லும் மேகம் குளிர்ந்து பொழிகிறது... முகத்தில் தெறிக்கும் நீர்த்துளிகளில் உறக்கம் கரைய கலைகிறது கனவு...

கால்களை தயார் செய்வோம்...

 முகடுகள் இறங்கிவந்து முத்தமிடுவதில்லை பாதங்களை... தளராத கால்களை தயார் செய்வோம்...

உனக்கெப்படி மனம்வரும்...

 உன்னிடமிருந்து என் நினைவுகளை நீ எடுத்தெறிய மாட்டாயென்பது எனக்குத் தெரியும்... பறவையிடமிருந்து இறக்கைகளைப் பிய்தெடுக்க உனக்கெப்படி மனம்வரும்...

எழுகிறது வாழ்க்கை...

 ஆசைகளின் கல்லறையை அடித்தளமாக்கி அதன்மேல் எழுகிறது வாழ்க்கை...

வ்ழியாமலா போகும்...

 தேங்கும் நீரில் சேரும் அழுத்தத்தை தாங்கும் அணையின் கனத்த சுவரென மௌனம் வளர்க்கிறாய்... அணை நிரம்பும்போது உடையவில்லை எனிலும் வ்ழியாமலா போகும்...

குடை விரிக்கிறார்கள்...

 அன்பு வறண்டுபோன இடத்திலிருந்து அன்பின் துளிகளுக்காக காத்திருப்பவர்கள் பேரன்பை பெருமழையாகப் பொழிபவரிடம் குடை விரிக்கிறார்கள்...

சரியாக விளங்கவில்லை...

 சரியானதை சரியாக சரியான நேரத்தில் செய்வதாக நினைத்து சரியாக செய்தபின் தவறாகிப் போகும்போது சரியெது தவறெது என சரியாக விளங்கவில்லை...

என் நினைவுகளில் மிளிர்கிறாய்....

 மிச்சம் ஏதுமின்றி மச்சக்கண்களால் என்னை இழுக்கிறாய்... ஒச்சம் ஏதுமின்றி ஒளிரும் மணியாக என் நினைவுகளில் மிளிர்கிறாய்....

ஏறக்குறைய மரணம்...

 பிறரென்ன நினைப்பாரோவென தான்நினைத்து சுயம் தொலைக்கும் தருணம்... ஏறக்குறைய மரணம்...

நீ உணராததுபோலவே...

 அடர்நிறை விண்மீனொன்று அருகிலிருக்கும் தன்னை ஈர்ப்பதை உணர்வதில்லை விண்மீனை சுற்றும் கோள்... என் நெஞ்சில் அடர்ந்திருக்கும் உன் நினைவுகள் உன்னை ஈர்ப்பதை நீ உணராததுபோலவே...

பூக்களே பூக்கட்டும்...

 என் பாதங்கள் நடக்கும் பாதைகளெங்கும் முள்ளெடுத்து எறிபவர் விரல்களிலும் பூக்களே பூக்கட்டும்...

எத்தனை நேரம்தான்...

 மனதுக்குள் விருப்பங்களை ஒளித்து வைக்கிறாய்... மண்ணுக்குள் வேர்கள் மறைக்கும் மரம்போல... என் நினைவுகள் நீரூற்ற கண்கள் மலர்வதை எத்தனை நேரம்தான் மூடிவைப்பாய் இமைகளால்...

தெரியாதவன் மனிதனில்லை...

 அளவு மாறாமல் அள்ளிக் கொடுத்தாலும் வெண்ணையும் சுண்ணாம்பும் வேறுவேறுதான்... வேறுபாடு தெரியாதவன் மனிதனில்லை...

ஏன் நீ பொய் பூசுகிறாய்...

 என்னை வெறுப்பதுபோல நடிக்கிறாய்... உன் விருப்பங்களை மறைக்கிறாய்... உள்ளத்தின் ஓசைகளை உன்கண்கள் பேசும்போது உதடுகளில் ஏன் நீ பொய் பூசுகிறாய்...

ஒட்டிக்கொள்ள நியாயமில்லை...

 ஒதுக்கி வைத்துவிட்டு உதாசீனம் செய்துவிட்டு பட்டியலிட குறைகளைத் தேடுகிறார்கள்... வெட்டிவிட நினைக்குமிடத்தில் ஒட்டிக்கொள்ள நியாயமில்லை...

உறுத்துவதேயில்லை ஒருபோதும்...

 முள்அள்ளி வீசுகிறது இரவு... மலர் அள்ளித் தூவும் உன் நினைவுகளின் பாதையில் நடக்கும் என் கனவுகளின் கால்கள் உறுத்துவதேயில்லை ஒருபோதும்...

நானெங்கே தூங்குவது...

 உன் நினைவுகளை தோரணங்களாக்கி தொங்கவிடுகிறது இந்த இரவு... திருவிழா கலகலப்பில் நானெங்கே தூங்குவது...

விடிகிறது இரவு...

 பல்லுடைந்த புலியின் பசியைப்போல பெருகும் உன் நினைவுகள் என்னைத் தின்னத் தொடங்க விடிகிறது இரவு...

கடக்க முடியவில்லை...

 நான் சொற்களைத் தூவுகிறேன்... நீயோ மௌனங்களை எறிகிறாய்... காயப்பட்டாலும் கடக்க முடியவில்லை உன் நினைவுகளை...

எப்படித் தெரியும்...

 வானம் விரிவென்று பறவைகள் அறியும்... பாவம் கிணற்றில் வாழும் தவளைகளுக்கு எப்படித் தெரியும்.

மிச்சமிருக்கிறது உன் நினைவு...

 கல்லொன்றை சிலையாக்கும் தச்சனென என் இரவைச் செதுக்குகின்றன கனவுகள்... விடியலில் மிச்சமிருக்கிறது உன் நினைவு...

உன் நினைவுகளை கட்டுகிறாய்...

 என் விழிகளை உன் இமைகளால் மறைக்கிறாய்... என் இதயத்தை உன் நினைவுகளால் நிறைக்கிறாய்... என் கற்பனைகளுக்கு இறக்கைகள் ஒட்டுகிறாய்... என் கனவுகளில் உன் நினைவுகளை கட்டுகிறாய்...

விடை தருமோ காலம்...

 விடை தேடி திரிகிறேன்... விடைபெறும் முன்னேனும் விடை தருமோ காலம்...

ஒளிந்துகொள்கின்றன...

 மச்சக்கண்ணில் நிரம்பியிருக்கும் கனவுகள் காலையில் வழியத்தொடங்க மிச்சமிருக்கும் கனவுகளுக்குள் ஒளிந்துகொள்கின்றன என் நினைவுகள்...

சில சொற்கள்...

 சில சொற்கள் புண்ணாக்கும்... சில சொற்கள் பொன்னாக்கும்..

ஒருபிடி எடுக்கிறேன்...

 கடல்நீரில் ஒருகையள்ளி கைகளுக்குள் கடலென்று குதூகலிக்கும் குழந்தையென நெஞ்சில் கொட்டிக்கிடக்கும் உன் நினைவுகளில் ஒருபிடி எடுக்கிறேன் இரவுகளில்...

ஒளிர்கிறது இரவில்...

 என் நெஞ்சில் நிலைகொண்ட உன் நினைவுகளை படியெடுத்த இளமதி நிறைமதியாகி ஒளிர்கிறது இரவில்...

காற்றும் கனமழையும்...

 காற்றும் கனமழையும் கைகோர்த்த இரவொன்று போர்த்தியிருக்கும் இருளெனக் கிடக்கிறது இதயம்... உன் முகம்காணா பொழுதுகளில்...

நீ...நான்...

விழிகளில் விரிகிறாய் நீ... மொழிகளில் பதிகிறேன் நான்...

எனக்குத் தெரியும்...

உனக்கு நீயே வேலியிடுகிறாய் மௌனங்களால்... எனக்குத் தெரியும் காற்றுக்கும் கடலுக்கும் வேலிகள் இல்லையென்று...

கலையுமென்பதை உணராமல்...

நீ என் நினைவுகளுக்கு ஏதேதோ ஒப்பனைகள் செய்து வேறொன்றென்று நினைக்கப் பழகுகிறாய்... உன் இமைகள் மூடும்போது ஒப்பனைகள் கலையுமென்பதை உணராமல்...

கரியாகிப் போகிறது வாழ்க்கை...

எதிர்பார்ப்புகள் நெருப்புத் துண்டுகளாக நிற்கும் வேளை நீரூற்றி செல்கிறது ஏமாற்றம்... கரியாகிப் போகிறது வாழ்க்கை...

நகர்கிறது வாழ்க்கை...

பொதிவண்டி இழுக்கும் மாட்டுக்கு முன்னால் தொங்கவிடும் புல்லுக்கட்டைப் போல சொற்களை தொங்கவிடுகிறாய்... உன் நினைவுகளை சுமந்துகொண்டே நகர்கிறது வாழ்க்கை ஏமாற்றம் உணராமல்...

உணர்வதேயில்லை...

உமிழ்ந்த பின்னும் தொழுவோர் உணர்வதேயில்லை மானத்தின் வெப்பத்தை... சூடு தொலைத்த உடலைப்போல...

என் பகல்கள்...

இருள் செறிந்த பொழுதுகளெல்லாம் இரவுகளெனில் ஒளி நிறைந்த பொழுதுகளெல்லாம் பகல்களெனில் உன் மௌனங்கள் என் இரவுகள்... உன் புன்னகைகள் என் பகல்கள்...

உயிரென்று சொல்கிறது...

பேரண்டமெங்கும் விரவிக் கிடக்கும் ஆற்றலென என்னுள் நிறைந்திருக்கும் உன் நினைவுகளை இந்த உலகம் உயிரென்று சொல்கிறது...

பறக்கிறேன்...

பூவில் சுரக்கும் தேன்துளி பருகும் வண்ணத்துப் பூச்சியென என்னில் சுரக்கும் உன் நினைவுகளை நானே பருகியபின் பறக்கிறேன்...

துள்ளுகிறது இசை...

புன்னகை பூசிய மௌனத்தில் சம்மதம் பொதிந்து வீசிச்செல்கிறாய் நீ... என்னில் விழுந்து உடையும் உன் மௌனத்தின் சிதறல்களில் துள்ளுகிறது இசை...

உணர்வதில்லை கனத்தை...

மென்பஞ்சின் சிறுபொதியொன்றை பற்றியெடுக்க மென்மையுணரும் விரல்கள் உணர்வதில்லை கனத்தை...

கவிழ்கிறது இரவு...

நீயின்றி எரிந்த பகலின்மேல் கூடாரமென கவிழ்கிறது இரவு... ஒட்டகமென உள்ளே நுழைகிறது உன் நினைவு...

என்ன செய்வாய்...

நீ மௌனங்களில் கூடுகட்டிவிட்டு என் நினைவுகளை அடைகாக்கிறாய்... கதகதப்பில் வளரும் கனவுகளின் சத்தத்தை என்ன செய்வாய்...

மேலும் ஒன்று...

அடிப்படைத் தேவைகளின் பட்டியலில் மேலும் ஒன்று... உணவு உடை உறையுள் மற்றும் உன் அன்பு...

மீண்டும் மீண்டும்...

நிலையில் நிற்கும் பெருந்தேரின் சக்கரங்கள் தேரோடும் வீதியை திரும்பிப் பார்ப்பதுபோல நீ திரும்ப மறுத்தாலும் எனையே நோக்கும் உன் நினைவுகள் மீண்டும் மீண்டும்...

கல்லெறியாதீர்கள்...

 என் கண்ணாடித் தவறுகளின்மேல் கல்லெறியாதீர்கள்... உடைந்து சிதறும் ஒவ்வொரு துண்டிலும் உங்கள் முகத்தைக் காட்டும்...

வேறென்ன தெரியும்...

அகச்சிவப்புக்கும் புறஊதாவுக்கும் இடைப்பட்ட அத்தனை நிறங்களும் உன் நினைவுகளை பூசிக்கொள்ள காண்பதிலெல்லாம் உன்னைத்தவிர வேறென்ன தெரியும்...

நாளெல்லாம் நிறைகிறது...

ஒரு மணித்துளி சிறுபொழுது மகிழ்ச்சியில் மனம் திளைக்க நாளெல்லாம் நிறைகிறது...

நெய்கிறேன் என் பொழுதுகளை...

குச்சிகளால் கூடு செய்யும் குருவியென உன் நினைவுகளால் நெய்கிறேன் என் பொழுதுகளை... நீ தங்குவதற்காக..

மூழ்குகிறேன் உன்னில்...

கடலலைகளில் மிதக்கும் காகிதக் கப்பலொன்று நீரில் ஊறி நனைந்து கடலிலேயே மூழ்குவது போல உன் நினைவுகளில் மிதக்கும் நானும் மூழ்குகிறேன் உன்னில்...

உணரவில்லை...

கிளையை வெட்டும்போதும் புரியவில்லை... உடலை வெட்டும்போதும் உணரவில்லை... கோடரியை கொண்டாடும் மரங்கள்...

எடை உணர்வதேயில்லை...

நீயோ நினைவுகளில் என்னைச் சுமக்கிறாய்... நானோ நினைவுகளில் உன்னைச் சுமக்கிறேன்... சுமைதாங்கி நெஞ்சங்கள் ஏனோ எடை உணர்வதேயில்லை...

காத்திருப்பதில்லை இரவு...

நிலவு வரும்வரை இருள் பூசிக்கொள்ளாமல் காத்திருப்பதில்லை இரவு...

பதிலாக அடுக்குகிறாய் நீ...

உன் மௌனங்களின் மேல் கேள்விகள் அடுக்குகிறேன் நான்... என் கேள்விகளின் மேல் மௌனங்களை பதிலாக அடுக்குகிறாய் நீ...

சில நேரங்களில் வாழ்க்கை...

பெருமழை பெய்த இரவைத் தொடரும் பகலில் தகிக்கும் கதிரின் வெப்பத்தில் புழுங்கும் காற்றென சில நேரங்களில் வாழ்க்கை...

முளைக்கின்றன கனவுகள்...

உன் நினைவுகளை தவிர வேறெதுவும் இல்லாத வெளியாக மாறிப்போனது என் உறக்கம்... விதைகளிலிருந்து பிறக்கும் செடிகளென முளைக்கின்றன கனவுகள்...

ஊர்கிறது இரவு...

சிறுகுழந்தை சிதறிச் சென்ற அரிசிப் பொரிகளென விண்ணெங்கும் விரவிக் கிடக்கும் உடுக்களிடையே எறும்பென ஊர்கிறது இரவு...

கழிகின்றன நாட்கள்...

உன் நினைவுகளின் குவியல்கள் ஊடாக நடக்கவே விழைகிறேன் நான்... முன்னும் நகராமல் பின்னும் நகராமல் பின்னிக்கொள்ளும் கால்களை நகர்த்துவதிலேயே கழிகின்றன நாட்கள்...

நகர்கிறது இரவு...

இரைதேட கிளை நீங்கும் வவ்வால்களின் மீயொலி இரைச்சல்கள் செவிதுளைக்க முகிலெடுத்து காதுகள் மூடும் நிலவைச் சுமந்து நகர்கிறது இரவு...

ஒளிர்கிறேன் நான்...

தன்னில் விழுந்த காகிதத்தை சரசரவென எரிக்கும் நெருப்பென உன்னில் விழுந்த என்னை எரிக்கும் உன் நினைவுகள்... விந்தைமுரண் என்னவெனில் கருகாமல் ஒளிர்கிறேன் நான்...

இருள் நீங்கியது...

 முழுநிலவு முகம் காட்டியதும் இருள் நீங்கியது என் வானில்...

என்ன செய்வாய்...

உன்னில் உயிர்த்திருக்கும் என் நினைவுகளை ஏதேதோ போர்வைகளால் நீ மூடுகிறாய்... உறங்காமல் உருளும் நினைவுகளை உறங்கவைக்க என்ன செய்வாய்...

எங்கிருந்து எடுப்பாய்...

நாளின் நாழிகைகள் அத்தனையையும் உன் மௌனத்தால் நிரப்பிய பின் பேசுவதற்கான பொழுதுகளை எங்கிருந்து எடுப்பாய்...

பறக்காமல் இருப்பதில்லை...

உதிர்ந்துவிடும் என்பதற்காக இறக்கைகள் விரித்து பறக்காமல் இருப்பதில்லை ஈசல்கள்...

அறியாமல்...

நீ மறுமொழி கூறாமல் மௌனமாகவே இருக்கிறாய்... உன் மனமொழிகள் என் மனவெளியெங்கும் என்மொழிகளோடு உலவுவதை அறியாமல்...

பரவுமோ நெருப்பு...

பற்றியெரியும் பெருங்காட்டில் திசைதெரியாமல் ஓடிய சிறுமுயலொன்று பதுங்கிய வளைமீதும் பரவுமோ நெருப்பு...

குளிர் காய்கிறேன்...

உன் நினைவுகள் தாலாட்ட குழந்தையாகிறேன் இரவுகளில்... உன் நினைவுகள் தீ மூட்ட குளிர் காய்கிறேன் பகல்களில்...

நினைவுகளால் தொடுகிறாய்...

தொடமுடியாத தூரத்தில் இருந்தாலும் சுடுகின்ற ஞாயிறின் வெப்பமென தொலைவில் நீ இருந்தாலும் உன் நினைவுகளால் தொடுகிறாய்...

இரவைக் கடக்கிறேன்...

 நீரோடும் ஆறொன்றை நீந்திக் கடக்க துதிக்கை தூக்கி வைக்கும் யானைபோல உன் நினைவுகளை உயர்த்தியபடி இரவைக் கடக்கிறேன் நான்...

உருமாறுவதில்லை...

என் உயிர்க்கலங்களின் உட்கருவினுள்ளே உயிர்த்திருக்கும் மரபணுத் தொடரில் உள்நுழைந்த உன் நினைவுகள் ஒவ்வொரு முறையும் இரட்டிக்கின்றன... ஒருபோதும் உருமாறுவதில்லை...

விடிகிறது இரவு...

என் இரவுகளில் உன் நினைவுகளின் கூரையில் நின்று கூவும் கனவுச்சேவலின் குரலில் விடிகிறது இரவு...

மதில் மேல்...

எந்தப்பக்கம் குதிப்பதென்று இருபுறமும் இடம் தேடாதவரை தடுமாற்றம் ஏதுமின்றி மதில் மேல் நடக்கிறது பூனை...

கடக்க இயலாமல்...

நீ ஓரிரு சொற்களில் கணங்களை கடந்துவிட்டாய் எளிதாக... சொற்களை சுமந்து கொண்டிருக்கும் நானல்லவா தடுமாறிப்போகிறேன் அந்தக் கணங்களை கடக்க இயலாமல்...

என்ன சொல்வாய்...?

ஏதோவொரு புதியவனைப்போல என்னிடம் பேசிவிட்டாய்... எப்போதும் உன்னுடனே இருக்கும் என் நினைவுகளிடம் என்ன சொல்வாய்...?

நான் பேசும் இரவுகளில்...

தூரத்தில் இருக்கும் நீயும் அருகில் இருக்கும் உன் நினைவுகளும் வேறு வேறு என்றே எண்ணுகிறாய் நீ... ஒன்றே என எண்ணுகிறேன் நான்... என்னோடு நான் பேசும் இரவுகளில்...

களைத்துப் போகிறேன்...

கடல்சேரும் நதியென களைத்துப் போகிறேன் கரடுமுரடான காலங்களைக் கடந்தபிறகு...

நகர்த்துகின்றன இரவை...

என் இரவுகளில் உறக்கப் பலகையில் சோழி உருட்டுகின்றன உன் நினைவுகள்... கவிந்த சோழிகள் கனவுகளாகின்றன... நிமிர்ந்த சோழிகள் இழுத்து நகர்த்துகின்றன இரவை...

குளிரும் இரவில்...

என்னருகில் நீ செலவுசெய்த சிறுபொழுதின் கதகதப்பை எடுத்தள்ளி என்மேல் போர்த்துகிறேன் குளிரும் இரவில்...

உன் நினைவு...

கருப்புப் புரவியில் கடுகிப் பறக்கும் குதிரையோட்டியென இரவின் மீதேறி பயணிக்கின்றது உன் நினைவு...

சே...

 சே... அடர்இருள்மேல் விழுந்த ஒளி... சே... உறைந்து கிடந்த உலகின்மீது காலம் கவிழ்த்த நெருப்பு... சே... ஓரிடத்தில் விழும்போது வேறிடத்தில் எழுகின்ற மறைவே இல்லாத ஞாயிறு... அந்த ஞாயிறு துகள்கள் நினைவுகளில் நிற்கும்வரை நீர்த்துப்போகாது நீர்சூழ் உலகு...

இரவுகளெங்கும்...

 நெருஞ்சி முட்களின் மேல் நடக்கும் கால்கள் குருதித் தடங்களை விட்டுச்செல்வதுபோல உன் நினைவுகளில் நடக்கும் நெஞ்சின் தடங்கள் இரவுகளெங்கும்...

கடந்து போகுமென...

நிலாக்காலங்களும் நிரந்தரமில்லை... நெருப்பு நேரங்களும் நிரந்தரமில்லை... நிம்மதி தேடும் நெஞ்சத்திற்கு நிச்சயமாய் தெரியும் இதுவும் கடந்து போகுமென...

வெறுமையாக்குகிறாய்...

எனக்கும் உனக்குமிடையே நினைவுகளை நிரப்புகிறாய்... என் இமைகளுக்கும் விழிகளுக்குமிடையே கனவுகளை நிரப்புகிறாய்... உறக்கத்தின் உயிரைமட்டுமேன் வெறுமையாக்குகிறாய்...

பத்து தலைகள்..

பொய்மேல் பொய்யடுக்கி புனைந்து அம்புநுனியால் அறமறுத்து ஒற்றைத்தலை சாய்த்து நிமிர்ந்தவன் எதிரே நிற்கின்றன பத்து தலைகள்..

தரிசாகக் கிடக்கின்றன...

நீரில்லா நிலம்போல தரிசாகக் கிடக்கின்றன நீயில்லா பொழுதுகளும்...

தள்ளாடுகிறது காற்று...

கழை துளை நுழை காற்று கடக்கும்போது சுமந்து செல்லும் இசையில் தள்ளாடுகிறது காற்று...

நிறுத்துவதேயில்லை...

கடல் தாண்டும்வரை பறத்தலை நிறுத்தாத வலசைபோகும் பறவைகளைப்போல உன் நினைவுகளும்... இரவு கடக்கும்வரை கனவுகள் தெளிப்பதை நிறுத்துவதேயில்லை...

நிறம் மாறுவதில்லை...

ஒளியின் வண்ணங்களை எத்தனைமுறை மாற்றினாலும் நிழலொன்றும் நிறம் மாறுவதில்லை...

உன் நினைவுகள் தாங்கும் நெஞ்சம்...

உன் நிழல் தாங்கும் நிலம் வெப்பம் இழப்பதுபோல கவலைகள் தொலைக்கிறது உன் நினைவுகள் தாங்கும் நெஞ்சம்...

உன் நினைவுகளை விசிறிக்கொண்டு...

முதன்முறை கூடுதாண்ட படபடவென இறக்கைகள் அடிக்கும் பறவையாகிறேன் இரவு கடக்கும்போது உன் நினைவுகளை விசிறிக்கொண்டு...

கனத்துப் பொழியும்போது...

கருக்கொண்ட மேகம் கனத்துப் பொழியும்போது கடலென்றும் நிலமென்றும் பார்ப்பதில்லை...

இருந்தெதற்கு...

ஆழ்கடலின் அடித்தரையென கிடக்கிறது நெஞ்சம்... ஆழியென விரியும் உன் நினைவுகளின் அழுத்தம் தாங்கி... நீரில்லா கடல் இருந்தெதற்கு...

வெளிச்சமாகிறது அகம்...

இருள்திரை விலகியபின் விடியலின் கீற்றுகள் ஒளிபூசும் வானமென உன் முகம் கண்டபின் வெளிச்சமாகிறது அகம்...

உன் நினைவுகளை நீங்கும்போது...

கூட்டத்தைப் பிரிந்த எறும்பொன்று வாசம்தேடி பரிதவித்து அலைவதுபோலவே மாறிப்போகிறது மனது... உன் நினைவுகளை நீங்கும்போது...

உணராமலில்லை நான்...

நானும் நீயும் மட்டுமேயறிந்த அந்த கேள்விக்கு நீ இல்லையென்று விடையளித்தாய்... உன் உள்ளத்திற்கும் உதடுகளுக்குமிடையே உண்மை சிக்கிக்கிடப்பதை உணராமலில்லை நான்...

நெருப்பென்றும் கருப்பில்லை...

கருப்பான கரியில் எரியும் நெருப்பென்றும் கருப்பில்லை...

சிதறிய சில்லுகளிலும்...

இறுகிப்போன உன் நினைவுகளில் இரவுளியால் கனவுகள் செதுக்குகிறாய்... சிலையில் மட்டுமல்ல சிதறிய சில்லுகளிலும் கனவுகள்....

நான் நிரப்புகிறேன் கனவுகளால்...

நமக்கிடையேயான பொழுதுகளை நீ நிரப்புகிறாய் தயக்கங்களால்... நான் நிரப்புகிறேன் கனவுகளால்...

மிதக்கிறது நிலவு...

அமைதியாக நகரும் நதியில் மிதக்கிறது நிலவு நகராமல்...

நீ கரைகிறாய் என்னில்...

உனக்கும் எனக்குமிடையே இருந்த கனத்த மௌனம் ஒற்றை சொல்லில் கரைந்த கணத்தில் நான் கரைகிறேன் உன்னில்... நீ கரைகிறாய் என்னில்...

தலையும் நீ பூவும் நீ...

சுண்டிவிட்ட காசு போல சுழலும் நினைவுகள் இரவோ பகலோ இதயத்தில் விழும்போது தலையும் நீ பூவும் நீ...

எதைக்கொண்டு நிறுத்துவாய்...

உன் இருவிழிகளில் கசியும் நீரை ஒருவிரலால் துடைக்கிறாய் என்னைப் பார்த்தவுடன்... என் இதயத்தின் அழுகையை எதைக்கொண்டு நிறுத்துவாய்...

கனவுகளின் வீதியில்..

பெருந்தேரின் உருளும் சக்கரங்களென உன் நினைவுகள்... மெல்ல நகர்கிறது இரவு கனவுகளின் வீதியில்..

தெரிவதில்லை...

கூடுபிரிந்த பிறகும் இறக்கைகள் விரிக்கும்வரை பறக்க முடியுமென தெரிவதில்லை பட்டாம்பூச்சிகளுக்கு...

ஊசிகுத்துகின்றன உன் நினைவுகள்...

 சட்டென முகத்திலறையும் குளிர்தூறலென ஊசிகுத்துகின்றன உன் நினைவுகள்... குடை விரிக்கவில்லை நான்...

மீதிநிலவு நகைத்தது...

பிறைநிலவு அழகென்றேன்... மீதிநிலவு நகைத்தது...

ஏன் மாறிப்போனாய் நீ....

லேசான காற்றுக்கே பறக்கும் ஈசலின் இறக்கைகளென என்னை மாற்றிவிட்டு பெருங்காற்றாய் ஏன் மாறிப்போனாய் நீ....

குறையேதுமில்லா...

குறையேதுமில்லா வளந்தந்த உலகை குறையுயிராய் ஆக்கிவிட குறையே வாழ்வாகும் வாழ்வே குறையாகும்...

ரணமாக்குகிறாய்...

கத்திநுனியென கண்கள் தீட்டுகிறாய்... என் புத்திகிழித்து புகுந்துகொள்கிறாய்... நித்தமும் நெஞ்சறுத்து ரணமாக்குகிறாய் பிணமாக்காமல்...

கரைந்து போகின்றன...

திகட்டும்வரை பொழிந்தபின் கரைந்து போகின்றன மழைமேகங்கள்...

இணைக்கும் பாலமென...

பெருநதியின் இருகரைகளையும் இணைக்கும் பாலமென என் இரவுகளுக்கும் பகல்களுக்கும் இடையில் நீ... சுழித்துக்கொண்டு பாய்கின்றன உன் நினைவுகள்...

நீ மாயக்காரி...

நீ மாயக்காரி... இமைகளுக்குள் என்னைச் சுருட்டுகிறாய்... இதயத்திற்குள் என்னை உருட்டுகிறாய்... நீ மாயக்காரி...

குனிந்து பார்ப்பதில்லை...

சாயாமல் தாங்கிய வேர்களை நிமிர்ந்தபின் குனிந்து பார்ப்பதில்லை மரங்கள்...

எனக்குப் புரிவதேயில்லை...

 காலம் எப்படி உன் கைகளில் விளையாட்டு பொம்மையாகிறது... நொடிகளை யுகங்களாக இழுக்கிறாய்... யுகங்களை நொடிகளாக சுருக்குகிறாய்... இரவையும் பகலையும் இடமும் வலமும் சுழற்றுகிறாய்... எனக்குப் புரிவதேயில்லை...

வானமாகிப்போனது...

 சிறு புன்னகைக்குள் நீ என்னைச் சிறைவைத்த பிறகு கூண்டே வானமாகிப்போனது எனக்கு...

திசைகளுக்கு வெளியே...

 தீர்வு தேடச்சொல்லி தினமும் விரட்டுகின்றன சவால்கள்... திசைகளுக்கு வெளியே தேடச்சொல்கிறது வாழ்க்கை...

அத்தனையையும் கிழிக்கும்..

அடர் இருள் வான் நிறைத்தாலும் அதிகாலை ஞாயிறு அத்தனையையும் கிழிக்கும்..

உன் நினைவுகள்...

நாளில் பாதி பகலாகிறது நாளில் மீதி இரவாகிறது... என்னில் பாதி நீயாகிறாய் என்னில் மீதியாய் உன் நினைவுகள்...

ஏக்கமாய் விரிகிறது...

பறக்கும்போது இறக்கைகள் தட்டவில்லை... சற்றே பெரிய கூண்டுதான்... பறவையின் கண்களில்தான் ஏக்கமாய் விரிகிறது வானம்...

விடுவதேயில்லை...

தென்றலாய் உன் நினைவுகள்... நான் தவழ்கிறேன்... பெருங்காற்றாய் உன் நினைவுகள்... நான் சுழல்கிறேன்... என்னை அசையாமலிருக்க விடுவதேயில்லை உன் நினைவுகள்...

பழிப்பதில்லை...

பெருங்காற்றில் சாயும் மரம் பழிப்பதில்லை வேர்களை...

நிறைகின்றன கனவுகள்...

கலப்பை நுனியென நெஞ்சம் உழும் உன் நினைவுகள்... உன்னை விதைத்தபின் இரவெங்கும் நிறைகின்றன கனவுகள்...

காய்ந்த காடு...

நெருப்பின் சிறுபொறிக்குள் ஒளிந்திருக்கும் பெருந்தீயை கருகும் முன்னர் உணர்கிறது காய்ந்த காடு...

கரைதேடவா முடியும்...

கரைகள் தெரியும்வரை நீந்தவில்லை... கைகள் களைக்கும்வரை நீந்துகிறேன்... உன் நினைவுகள் பெருங்கடலான பிறகு கரைதேடவா முடியும்...

இறைத்துச் செல்கிறாய்...

மேகங்கள் நீங்கிய கருவா இரவை கணக்கின்றி நிறைக்கும் விண்மீன்களென நீ என்னில் இறைத்துச் செல்கிறாய் கனவுகளை...

நீருக்குத் தெரியாது...

மிதக்கும் கப்பலில் விழுந்த துளையில் புகுந்த நீருக்குத் தெரியாது மூழ்கும் கப்பலென்று...

படபடக்கின்றன...

நெஞ்சமெங்கும் கூட்டுப்புழுக்களென கொட்டிக்கிடக்கும் உன் நினைவுகளுக்கு இரவானது எப்படித்தான் தெரியுமோ... படபடக்கின்றன பட்டாம்பூச்சிகளாக கனவுகள்...

நீயும் உன் நினைவுகளும்...

நிலம் விழுங்கும் கடலென எனை விழுங்கும் உன் நினைவுகள்... தரை மறைத்து காட்சியாகும் கடலும் அலைகளுமாக நீயும் உன் நினைவுகளும்...

விடியல்கள்...

கடற்கரையில் மணல்வீடு கட்டி விளையாடும் சிறார்களைப்போல உன் நினைவுகளும்... கனவுகளை கட்டியெழுப்புகின்றன உறக்கத்தில்... கடலலைகளென விடியல்கள்...

என் இரவுகள்...

நீ என் இரவுகளைக் கொய்து சூடிக் கொள்கிறாய்... நீ நரை கடக்கிறாய் என் இரவுகள் ஒளியில் நடக்கின்றன...

வேர்கள்...

நீர் உறிஞ்சும் வேர்கள் நிலம் நீங்குவதில்லை பூக்களைப் பார்க்க...

விடியவில்லை...

தெரியாத வழியொன்றில் தயங்கித் தயங்கி நடந்து செல்லும் சிறுவனைப்போல உன் நினைவுகளின் ஊடாக நடக்கிறேன் இரவில்... இரவு முடிந்தபின்னும் விடியவில்லை...

பாவம் நீ...

உலைமூடியால் அலைமூட விழைகிறாய்... நிலவொளியில் குளிர்காய நினைக்கிறாய்... பாவம் நீ என்னை மறக்க ஏதேதோ செய்கிறாய்...

மனம் மட்டும்...

கலப்பை களைப்பில்லை உழுகிறேன் வலியில்லை... நுகத்தடி சுமையில்லை இழுக்கிறேன் வலியில்லை... சாட்டை முதுகுதொட மனம் மட்டும் வலிக்கிறது...

விதி...

நிழல்தரும் மரங்கள் சுடும்வெயிலில் நிற்பதுதான் விதி...

என் உறக்கம்தான்...

பெருங்கடலின் பரப்பில் நிலைகொள்ளாமல் நகரும் கடும்புயலைப் போலவே உன் நினைவுகள்... கணிக்கவே முடிவதில்லை... எந்தப்பக்கம் கரைகடந்தாலும் சேதமாகிப் போவதென்னவோ என் உறக்கம்தான்...

அடர்வனமென...

அடர்வனமென உன் நினைவுகள்... ஊடறுக்கும் ஓடைகளாக கனவுகள்... நதியாகி காடு கடக்க விடிகிறது...

மலர்கள்....

தேனீக்களுக்காக தமக்குள் தேன் நிரப்புவதில்லை மலர்கள்....

எத்தனை காலமாக...

நெடுநேரம் நிற்க களைத்த கால்கள் வலிக்கும் வேளையில் நினைக்கிறேன்... பாவம் உன் நினைவுகள்... எத்தனை காலமாக என் இதயத்தில் நிற்கின்றன களைப்பு கடந்து...

பிம்பங்களாய் கனவுகள்...

ஒளியெல்லாம் ஓய்வெடுக்கச் சென்றபின் ஒப்பனை செய்துகொள்ளும் உன் நினைவுகள் உறக்கஆடியில் முகம்பார்க்க பிம்பங்களாய் கனவுகள்...

கொதிக்கும் உலை...

அரிசி போட்டதும் அடங்கியதுபோலத் தெரிந்தாலும் அடுப்பெரியும்வரை கொதிக்கும் உலை...

நனையாமலா இருக்கிறது...

என்னிடமிருந்து ஏனோ நீ விலகி நிற்கிறாய்... அதனாலென்ன நீர்பொழியும் மேகங்கள்கூட நிலத்திடமிருந்து தள்ளித்தான் இருக்கின்றன... நிலமென்ன நனையாமலா இருக்கிறது...

வேடிக்கை பார்க்கிறது கோடை..

சித்திரை நிலவொளி இருளின்மேல் வழிய ஒளியில் நனையும் இரவோ வெளிச்சமாய் சிலிர்க்க வியர்வை வழிய வேடிக்கை பார்க்கிறது கோடை..

இருளில் தேடுகிறதோ உறக்கம்...??

தொடக்கமும் முடிவும் தெரியாத இருள்சுழலில் விழுந்தபின் விழிகள் விரித்துப் பார்த்தாலும் ஒளியின் தடமேதும் தெரியவில்லை... உறங்கக் காத்திருக்கிறேன்... என் விழிசேரும் வழி தெரியாமல் இருளில் தேடுகிறதோ உறக்கம்...??

உன் நினைவுகள் மட்டும் எப்படி...

நெருப்பென எரியும் கவலைகள் எத்தனையோ என்னைப் பற்றிக்கொள்ள திகுதிகுவென எரிகிறேன்... உன் நினைவுகள் மட்டும் எப்படி பொன்னாக..??

நதி உடைக்காதவரை...

பெருநதியொன்றைத் தேக்கி வைத்திருக்கும் அணையென உன் நினைவுகளை நிரப்பியிருக்கிறது நெஞ்சம்... நதி உடைக்காதவரை உயிர்த்திருக்கும் அணை...

உன் நினைவுகள் தீர்ந்தபின்...

அலைகள் ஓய்ந்தபின் கடலாடக் காத்திருக்கும் சிறுவனைப்போல காத்திருக்கிறேன்... உன் நினைவுகள் தீர்ந்தபின் வேறேதும் நினைக்கலாமென...

நேரம் தீரும்வரை...

 நீர் நிரப்பி வைக்கச் சொல்லி ஓட்டைப் பானையை ஒப்படைக்கிறது காலம்... நிரப்பிக்கொண்டே இருக்கிறேன் நேரம் தீரும்வரை...

இடையே நிற்கும் உன் நினைவு...

தொண்டையில் சிக்கிய மீன்முள்ளென மனதிற்கும் அறிவுக்கும் இடையே நிற்கும் உன் நினைவு...

கதகதப்பாக கனவுகள்...

குளிரும் உன் நினைவுகளால் எரியும் என் இரவுகளைப் போர்த்துகிறேன்... கதகதப்பாக கனவுகள்...

துள்ளுகின்றன மீன்கள்...

தெளிந்த நீரில் தெரியும் நிலவுக்கு சொந்தம் கொண்டாடி துள்ளுகின்றன மீன்கள்...

ஒளிர்கிறது என் இரவு...

என் உறக்கத்திற்குள் ஓடுகின்ற உன் நினைவுகள் ஒன்றோடொன்று உரசிக்கொள்கின்றன காற்றிலாடும் காய்ந்த மூங்கில்களைப்போல... பறக்கும் தீப்பொறிக் கனவுகளில் ஒளிர்கிறது என் இரவு...

கற்றுக்கொள்வதில்லை...

பூக்களும் இலைகளும் உதிரும் மரத்தை ஒவ்வொரு நாளும் கடந்து செல்கிறோம்... கற்றுக்கொள்வதில்லை...

என் இரவுகள்...

இளவேனிலின் தொடக்கத்தில் இலைகளுக்கு நிகராக பூக்கள் சுமக்கும் சரக்கொன்றை மரமென உன் நினைவுகளுக்கு நிகராக கனவுகள் சுமக்கின்றன என் இரவுகள்...

என்ன செய்வது...

அரும்புகளின் மேல் அதிகாலை அமர்ந்திருக்கும் பனித்துளிபோல் அழகாகவே தொடங்குகின்றன எல்லாமே... என்ன செய்வது காயும் வெயிலின் கடிவாளமொன்றும் பனித்துளியிடம் இல்லையே...

குழம்புகிறது இரவு...

கனவுகளின் வெளியில் காட்சிகளாக உன் நினைவுகள்... உன் நினைவுகளின் வெளியெங்கும் நீக்கமற நான்... என்னை நான் பார்க்கும் கனவுகளில் நீ மட்டுமே தெரிய என்னோடு சேர்ந்து குழம்புகிறது இரவு...

கடந்து செல்கிறது காலம்...

 நீ பகல்களை சிறைப்பிடிக்கிறாய்... உன் நினைவுகள் இரவுகளை சிறைப்பிடிக்கின்றன... நகராத கணமொன்றில் நானும் நீயும் நிற்க நம்மைக் கடந்து செல்கிறது காலம்...

என்னதான் தேடுகிறதோ காலம்...

விலங்குகளை மட்டும் என்னிடம் விட்டுவிட்டு அத்தனையும் அள்ளிக்கொண்ட பின் இன்னும் என்னிடம் என்னதான் தேடுகிறதோ காலம்...

கேள்விகளும் பதில்களும்...

நீ என்னிடம் ஏதும் சொல்வதுமில்லை... நான் உன்னிடம் ஏதும் கேட்பதுமில்லை... உன் நினைவுகளின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் நானிருக்கிறேன்... என் நினைவுகளின் நீள்வெட்டுத் தோற்றத்தில் நீயிருக்கிறாய்... பொருளற்றுப் போகின்றன கேள்விகளும் பதில்களும்...

திரும்பிக்கூட பார்ப்பதில்லை...

தூக்கிவைத்து கொண்டாடுபவர்களை திரும்பிக்கூட பார்ப்பதில்லை தோகை உதிர்த்த மயில்...

நதியென ஓடுகிறது...

என் இரவின் கரையில் நீ நிற்கிறாய்... உன் பகலின் கரையில் நான் நிற்கிறேன்... நதியென ஓடுகிறது நாளொன்று நாம் கடக்கும் ஆழத்தில்...

இனித்தாலென்ன கசந்தாலென்ன...

கரும்புத் தோட்டத்தில் எறும்புகளுக்கு இடமில்லையென சொல்லிவிட்ட பின் கரும்புகள் இனித்தாலென்ன கசந்தாலென்ன எறும்புகளுக்கு...

நீயன்றி வேறுயார்...

உன் நினைவுகளால் நிரம்பும் இரவுகளில் வழிந்தோடும் கனவுகளில் படகென மிதக்கும் என் உறக்கத்தில் பயணிப்பது நீயன்றி வேறுயார்...

முழுமையாய் நிறைகிறேன்...

என்னருகில் நீ இல்லாதபோது நான் என்ன நினைக்கிறேனென நீ நினைக்கும் வேளையில் உன்னில் முழுமையாய் நிறைகிறேன் நான்...

சுற்றம் சொல்கிறது...

உள்ளத்தின் காயங்களில் வலி வழிய நிற்கும்போது கத்தி எடுத்து சுரண்டும் சுற்றம் சொல்கிறது குற்றமில்லையென...

என் இரவுகள்...

பெரும்புயல் கடந்து சென்ற மழைக்காட்டில் சாய்ந்த மரங்களென மாறிப் போகின்றன என் இரவுகள் உன் நினைவுகள் கடக்கும்போது...

கவனிப்பதில்லை...

நீருக்குள் தாவும் தவளை கவனிப்பதில்லை வட்ட அலைகள் கரைசேர்கிறதாவென...

எங்கெங்கோ...

எருக்கு விதையின் இறக்கைகளாகும் இழைகளென என்னில் விரியும் உன் நினைவுகள்... இரவுக் காற்றில் எங்கெங்கோ இழுத்துச் செல்கின்றன என்னை...

அதனாலென்ன...

திரியைத் தின்னும் தீயென என்னைத் தின்னும் நிராசைகள்... அதனாலென்ன ஒளிர்கிறதே வாழ்க்கை உடனிருப்போருக்கு...

உணர்வதில்லையா நீ...

உன் நினைவுகளின் தோட்டத்தில் கனவுமலர்கள் கொய்யும் என் இரவுகள் சரம் தொடுக்க உன் இரவுகளில் நறுமணம் கமழ்வதை உணர்வதில்லையா நீ...

ஓய்வெடுப்பதில்லை...

நின்ற இடத்தில் நகராமல் பறந்தாலும் ஓய்வெடுப்பதில்லை தும்பியின் இறக்கைகள்...

நினைவு வண்டுகள்...

இரவு மூங்கிலில் நினைவு வண்டுகள் துளையிட்டுச் செல்ல உறக்கக் காற்று உட்புகுந்து வெளியேற இசையென வழிந்திடும் கனவுகள்...

வேர்கள்...

வண்ணமலர்கள் வான் பார்த்து புன்னகைக்க மண்ணுக்குள் நீர் தேடுகின்றன வேர்கள்...

என் இரவுகள்...

வெயிலெனக் காயும் உன் நினைவுகள்... நிழலெனத் தொடரும் கனவுகள்... மழையெனப் பொழியும் உன் நினைவுகள்... வெள்ளமெனப் பெருகும் கனவுகள்... வெப்பமும் ஈரமும் விரவிக் கிடக்கும் என் இரவுகள்...

விடியும்வரை...

என் இரவின் நீளத்தை உன் நினைவால் அளக்கிறேன் விடியும்வரை...

நான் மட்டுமே அறிவேன்...

 ஏழு மலைகள் தாண்டி ஏழு கடல்களுக்கு அப்பால் ஒரு கிளியின் இதயத்தில் இருக்கிறது என் உயிர்... ஏழு மலைகளும் ஏழு கடல்களும் உன் இருவிழிகளுக்குள் இருக்கிறதென்பதை நான் மட்டுமே அறிவேன்...

பாறையும் இரவும்...

 கடும் கோடையில் காலைமுதல் காய்ந்த பாறை எற்பாடு தொடக்கத்தில் தகிப்பதுபோல உன் நினைவுகளின் வெப்பத்தில் சுடுகிறது இந்த இரவு... கடந்துவிட முயற்சிக்கிறேன் நெடுந்தூரம் நீள்கிறது பாறையும் இரவும்...

என் உறக்கம்..

தூண்டில் புழுவாக உன் நினைவுகளை மாட்டிவைத்து இரவுக் குளத்தில் எறிகிறாய்... அப்பாவி மீனென என் உறக்கம்..

புரியவைப்பது எப்படி...

அதிவிரைவாக வண்டிகள் கடக்கும் அகன்ற சாலையின் நடுவில் புற்களின் வாசம் தேடும் ஆடுகளுக்கு புரியவைப்பது எப்படி... மேய்ச்சல் நிலம் பசுமையின் மயானமாக மாறிப்போனதென்று...

நம் விழிகளுக்கிடையே...

உன் வலக்கண்ணில் தொடங்கும் பகல் இடக்கண்ணில் முடிய உன் இடக்கண்ணில் தொடங்கும் இரவு என் இமைகளுக்குள் நிறைய நாளொன்று நகர்கிறது நம் விழிகளுக்கிடையே...

பிடிமானமாக இரவு...

உறைந்த ஏரியின் மேற்பரப்பை அடித்து உடைக்கும் துருவக்கரடியின் முன்னங்கால்களென இமைகள் தட்டும் உன் நினைவுகள்... பின்னங்கால்களில் பிடிமானமாக இரவு...

மாற்றுச்சட்டைகள் ஏராளம்...

முதுகுக்குப் பின்னால் சேறள்ளித் தெளிக்கும் கரங்கள் ஒருவேளை அவர்முகம் தேய்க்கக்கூடும்... என்னிடம் மாற்றுச்சட்டைகள் ஏராளம்...

வாரி இறைக்கிறது உன் நினைவு...

பெருந்திணிவு விண்மீனொன்று வெடித்துச் சிதறும்போது வெளியாகும் கதிர்வீச்சுகளென வண்ணங்களை கனவுகளாக வாரி இறைக்கிறது உன் நினைவு...

அடுத்தநாளே இளவேனிலென்று...

பின்பனிக் காலத்தில் இலைகளை உதிர்க்கும் மரங்களைப்போல கனவுகளை உதிர்க்கும் உன் நினைவுகளுக்கு தெரிந்திருக்கிறது அடுத்தநாளே இளவேனிலென்று...

இரவுகளும் பகல்களும்...

அச்சில் சுழலும் சக்கரமென உன் நினைவெனும் ஒற்றைப் புள்ளியில் சுழல்கிறேன்... கீழும் மேலுமாக இரவுகளும் பகல்களும்... 

நிற்கிறது இரவு...

இமைகளுக்குள் நீ உலவுகிறாய்... நகர முடியாமல் நிற்கிறது இரவு...

உறக்கம் சுடுகின்றன...

நெருப்பெரியும் இரவுகளை விசிறிவிடுகின்றன உன் நினைவுகள்... சிதறும் தீப்பொறிக் கனவுகள் உறக்கம் சுடுகின்றன...

மூழ்கியே இருக்கட்டும்...

முத்துகளை முன் வைக்கிறேன் சிப்பிகளை அழகென்கிறாய்... நீ சங்குமாலை சூடிக்கொள்... முத்துக்கள் மூழ்கியே இருக்கட்டும் ஆழியின் ஆழத்தில்...

இனிக்கும் கனவுகள்...

கரும்பெங்கும் நிரம்பிய சாறென என்னுள் நிறையும் உன் நினைவுகள்... எடுத்தென்னைச் சுவைக்கும் இரவுகளில் எங்கெங்கும் இனிக்கும் கனவுகள்...

நிழல்...

அந்திக்குப் பின் எந்தப் பக்கம் சாய்வதென யோசிக்கிறது நிழல்...

மூழ்குகிறேன் இரவுக்கடலில்...

எட்டுக் கால்களாலும் இரை வளைக்கும் நீராளியென என்னைச் சுற்றி இறுகப் பற்றும் உன் நினைவுகள் உறக்கம் உறிஞ்ச விழித்தபடியே மூழ்குகிறேன் இரவுக்கடலில்...

நிலவில்லா வானம்...

உடுக்களிலிருந்து சிதறும் ஒளியின் சிறு வெளிச்சத்தில் கிழக்கு தேடும் இரவை சுமந்து நிற்கிறது நிலவில்லா வானம்...

நானன்றி வேறென்ன...

ஆடும் செக்கில் விழுந்த காய்ந்த தேங்காயென ஆகிறேன்... உன் நினைவுகளுக்கும் இயல்புக்கும் இடையே சிக்கி... நிம்மதி வழிந்தோட இறுதியாக எஞ்சுவது நானன்றி வேறென்ன...

வீழும்வரை...

 பெருங்காற்றில் பிழைத்திருக்க நாணலாக மாறச்சொல்கிறது வாழ்க்கை... வீழ்ந்தாலும் வேதனையில்லை... வீழும்வரை வாழ்கிறேன் கனிதரும் மரமாக...

இந்த இரவிலும்...

திகுதிகுவென எரியும் நெருப்பின் நீலச்சுடரில் மேலெழும் வெப்பமென உன் நினைவுகள் கிளப்பும் அனல் தகிக்கிறது பெருமழை பெய்யும் இந்த இரவிலும்...

விலகுகிறது உறக்கம்...

 திடும்மெனச் சரியும் பாறைகளின் அதிர்வில் மிரண்டு ஓடும் மேய்ச்சல் விலங்கென இமைகளிலிருந்து விலகுகிறது உறக்கம்... சடசடவெனச் சரியும் உன் நினைவுகளால்...

குழம்புகிறது இலக்கணம்...

நான் என்பதன் நீட்சி நீ... நீ என்பதன் சுருக்கம் நான்... நாம் என்பது பன்மை மறந்து ஒருமையாக சற்றே குழம்புகிறது இலக்கணம்...

முட்கள்...

வலிகள் ததும்பும் வாழ்க்கையில் வழிகள் தேடும்போது கிழிக்கின்றன முட்கள்...

நடக்கிறேன் நான்...

பஞ்சுப்பொதியாக என் மனம்... உன் நினைவுகளின் மழையில் கனக்கிறது... உன் கனவுகள் வெயிலாக லேசாகிறது... சுமையிறக்காமல் நடக்கிறேன் நான்...

என்ன செய்வாய்...

 என் நினைவுகள் உன்னில் பெரியதாக ஏதும் செய்வதில்லையென என்னிடம் சொல்லிவிட்டாய்... இரவு கண்ணாடியாகி உன் இதயத்தின்முன் நிற்கும்போது என்ன செய்வாய்...

வேறென்ன செய்வது...

 சிகரத்திலிருந்து விழுகிறேன் அமைதியாக... கைகள் பிடிமானம் தேடி பரிதவிக்கவில்லை... கால்கள் ஊன்றுமிடம் தேடி அலைபாயவில்லை... அமைதியாகவே விழுகிறேன்... சிகரமே தள்ளிவிட்ட பின் விழுவதைத் தவிர வேறென்ன செய்வது...

உயிர்ப்புடனே இருக்கின்றன...

 என்னுள் தாவித்தாவி குதிக்கும் உன் நினைவுகள் உயிர்ப்புடனே இருக்கின்றன இரவிலும் பகலிலும்... நீரிலும் நிலத்திலும் உயிர்த்திருக்கும் தவளை போல...

காலியாகும்வரை...

விடியல் தேடி நகரும் இரவை விடாமல் இழுத்துப் பிடிக்கின்றன உன் நினைவுகள்... கனவுகளெல்லாம் காலியாகும்வரை...

என்னை நானே...

உன் நினைவுகளில் என்னைத் தோய்த்து இரவுகளை வரைகிறேன்... உன் நினைவுகளில் என்னைக் குழைத்து என்னை நானே வனைகிறேன்...

இனி...

தொலைவை நீ அதிகரிக்க முடிவெடுத்தபின் இடைவெளியை உன் நினைவுகளால் நிரப்புகிறேன்... இனி போக்கும் வரத்தும் மெய்நிகர் பயணத்தில்..

நிம்மதியின் எச்சங்கள்...

சிதைந்துபோன உறக்கத்தின் ஊடாக நிம்மதியின் எச்சங்கள் தேடுவதில் கழியும் இரவு கருப்பாக இருந்தாலென்ன வெள்ளையாக இருந்தாலென்ன...

வளர்பிறையா தேய்பிறையா...

தேயும் திங்களென கரைகிறது இரவு... வளரும் மதியென பெருகுகின்றன உன் நினைவுகள்... வளர்பிறையா தேய்பிறையா எனத் தெரியாமல் திண்டாடுகிறது என் உறக்கம்...

குற்றம் புற்களிலில்லை...

முள் வழியில் நடந்து பழகிய கால்கள் புல்வெளியில் நடக்கும்போதும் மென்மை உணரவில்லையெனில் குற்றம் புற்களிலில்லை...

ஒதுக்கிச் செல்கிறாய்...

சருகொன்று காற்றில் மிதப்பதுபோல கனவுகளில் மிதக்கிறேன் நான்... கடைசியில் தரை சேர்ந்ததும் குப்பையென்று ஒதுக்கிச் செல்கிறாய் நீ...

நாட்கள் ஒதுக்குகிறது...

உள்ளம் புரியாமல் உடனிருக்கும் உறவுகள் முள்ளால் கீறிச்செல்ல முகம் சுளிக்காமல் நகர கற்றுத்தர நாட்கள் ஒதுக்குகிறது வாழ்க்கை...

ஆவதென்ன...

இருகரை வழிய பாய்ந்தோடும் பெருநதியென உன் நினைவுகள் என்னை இழுத்துச் செல்லும்போது எதிர்த்து நீந்துவதால் ஆவதென்ன...

தமிழுக்கு மட்டுமே...

 தாய்மொழி என்றொன்று எல்லோருக்குமுண்டு... மொழியே தாயாகி முக்காலமும் நிலைக்கும் பெருமை முதிர்ந்தாலும் மூப்பில்லா தமிழுக்கு மட்டுமே என்றுமுண்டு...

காற்றில் விசிறுகிறது...

அடுக்கடுக்காக உன் நினைவுகள் அடுத்தடுத்துப் பூத்திருக்க கனவுகளை காற்றில் விசிறுகிறது சரக்கொன்றை இரவு...

உணரச் செய்கின்றன...

என்னுள் எப்போதோ படிந்துபோன உன் நினைவுகளின் படிமங்களுக்கு இப்போதும் உயிர் உண்டென உணரச் செய்கின்றன இரவுகளின் கனவுகள்...

கரைகிறேன்...

நீரில் மிதக்கும் பனிப்பாறையென மிதக்கிறேன் உன் நினைவுகளில்... சிறுகச் சிறுக உருகுகிறேன் உன் நினைவுகளின் வெப்பத்தில்... உருக உருக கரைகிறேன் உன் நினைவுகளின் வெள்ளத்தில்...

மாறித்தான் போகிறது...

மழையாகி மலை கடந்து நதியாகி நிலம் கடந்து கடல்சேரும் காலத்தில் மாறித்தான் போகிறது நீரின் சுவை...

இறுக்கமாகவே இரு..

பாறையிடுக்கில் தேங்கும் நீர்போல உன் மனதில் தேங்குகிறேன்... நீ இறுக்கமாகவே இரு... மழையெனப் பொழிந்து வெயிலெனக் காய்ந்து பனியெனப் பெய்யும் என் நினைவுகள் விரிசல்கள் செய்யும்வரை நீ இறுக்கமாகவே இரு..

அப்பா...

 கடந்த நொடியெனவே காலம் காட்டுகிறது ஆண்டுகள் ஐந்து அடங்கிய பின்னரும்... இன்றைக்கும் உறங்கியெழும் வேளையில் உங்கள் குரலே செவி தட்டுகிறது... ஊரடங்கி உறங்கச் செல்லும் வேளையிலும் உங்கள் விரல்களே தலை வருடுகிறது... அப்பா... எப்போதும் அளவில்லா அன்பின் உச்சாணி... இப்போதும் எங்கள் வாழ்வின் அச்சாணி...

நீ...

 சுழியத்தில் தொடங்கி முடிவிலியாக நீளும் இயலெண்களப் போலவே உன் நினைவுகளும்... எண்களை எண்ணால் வகுத்தேன் ஈவும் மீதமுமாக எண்ணே வந்தது... உன் நினைவுகளை என்னால் வகுத்தேன் ஈவும் நீ மீதமும் நீ...

ஏனிந்தப் பசி...

என்னைத் தின்னும் உன் நினைவுகளுக்கு இரவுகளில் மட்டும் ஏனிந்தப் பசி...

இனிப்பதில்லை தேனீக்களுக்கு...

ஆயிரமாயிரம் மலர்களில் அமர்ந்தெழுந்து செய்த தேனடை பிழிந்தபின் தேனும் இனிப்பதில்லை தேனீக்களுக்கு...

எப்படித்தான் நடக்கின்றனவோ...

உறக்கமில்லா இரவுகளின் சுமைகள் இமைகளை அழுத்த திறக்க இயலா இமைகளினுள் எரியும் விழிகளில் எப்படித்தான் நடக்கின்றனவோ உன் நினைவுகள்...

உயரம் குறைவதில்லை...

ஒன்றிரண்டு பாறைகள் உருண்டு விழுவதால் ஒருபோதும் உயரம் குறைவதில்லை இமயம்...

எப்போதும் பொழியும்...

இரவு வானின் இருள் பின்னணியில் எப்போதேனும் பொழியும் எரிகற்களின் மழைபோல எப்போதும் பொழியும் கனவுகள் உன் நினைவுகளிலிருந்து...

காணாமல் போகிறது மகிழ்ச்சி...

நெடுநாள் நீர்காணா நிலத்தில் விழுந்த முதல் துளியென வாழ்க்கை தொட்டதும் வந்த வேகத்தில் காணாமல் போகிறது மகிழ்ச்சி...

வேர்களில் இருக்கிறேன்...

 நீயோ பூக்களில் என்னைத் தேடுகிறாய்... நானோ உன் வேர்களில் இருக்கிறேன்...

அடவியாகிறது இரவு...

கனிகள் நிறைந்த மரமொன்று காற்றிலசைய உதிரும் கனிகளென விழுகின்றன உன் நினைவுகள்... ஒவ்வொன்றும் முளைக்க கனவுகளின் அடவியாகிறது இரவு...

யோசிப்பதற்குள்...

இரவும் கனவும் என்னை உறங்கச் சொல்ல நீயும் நினைவுகளும் என்னை விழிக்கச் சொல்ல என்ன செய்வதென்று யோசிப்பதற்குள் விடிந்து விடுகிறது...

சமமாகவே வாய்ப்பளிக்கிறது...

 அலகு தீட்டி காத்திருக்கிறது கழுகு... பஞ்சாரம் தாண்டாமல் பார்த்திருக்கிறது கோழிக்குஞ்சு... சமமாகவே வாய்ப்பளிக்கிறது வாழ்க்கை...

உன் நினைவுகள் என்னோடு...

 பிடியொன்றின் கால்களுக்கிடையில் நடக்கும் கன்றென உன் நினைவுகள் என்னோடு...

மௌனமாகின்றன பெரும்பாலும்...

மலையிலிருந்து கீழிறங்கும்போது சலசலக்கும் சிற்றோடைகள் நதியாகும்போது மௌனமாகின்றன பெரும்பாலும்...

எதிரே நிற்கிறது என் உறக்கம்...

மதநீரொழுக தினவெடுத்துத் திரியும் வேழமென உன் நினைவு... என்ன செய்வதெனத் தெரியாமல் எதிரே நிற்கிறது என் உறக்கம்...

நிலம் வருந்துவதில்லை..

இடிமுழங்க கடந்து செல்லும் எல்லா மேகங்களும் பொழிவதில்லையெனப் புரிந்த நிலம் வருந்துவதில்லை..

உன்னைக் கடந்து...

என்னைச் சூழ்ந்திருக்கும் உன்னைக் கடந்து நண்பகல் சுடுவதுமில்லை நள்ளிரவு குளிர்வதுமில்லை...

கனவு முத்துக்கள்..

உன் நினைவுப் பெருங்கடலின் கரையில் என் உறக்கம் எடுக்கும் ஒவ்வொரு சிப்பிக்குள்ளும் கனவு முத்துக்கள்..

கவனிக்கப்படுவதில்லை...

 வெளிச்சம் உமிழ்ந்தபோதும் விண்மீன்கள் கவனிக்கப்படுவதில்லை பகலில்...

ஈரமாகிப் போகிறது இரவு...

இறைக்கக் குறையாமல் நீரூறும் கிணறென நினைவூறும் நெஞ்சம்... இறைத்து இறைத்து ஊற்றுகிறேன்... ஈரமாகிப் போகிறது இரவு...

கனக்கிறது உறக்கம்...

 கற்பாறையென கடினமாகவே இருக்கிறது இரவு... நினைவுளியால் செதுக்குகிறாய் நீ... கனவுச் சிலைகளால் கனக்கிறது உறக்கம்...

சரவெடியென...

 திரி கிள்ளப்பட்ட சரவெடியென உன் நினைவு... நெருப்போடு காத்திருக்கும் இந்த இரவு... செவிடாகித்தான் போனாலென்ன என் உறக்கம்...

தேடுவதற்காக...

 பேராறு ஒன்று கரைபுரள பெருவெள்ளம் பாய்ந்தோட தேங்கும் மணற்துகள்கள் வரைகின்றன நதியின் தடத்தை... பின்னொரு நாளில் தேடுவதற்காக...

கடந்து செல்வதேயில்லை...

 நீயில்லாத பொழுதுகளும் உன்னைச் சுமக்கும் நினைவுகளும் நகர்ந்து சென்றாலும் கடந்து செல்வதேயில்லை...

உவகையடைகிறது பாவம்....

 பெருங்காற்றில் மேலெழும்பும் சிறு சருகு உயரங்கள் தாழ்ந்ததாக உவகையடைகிறது பாவம்....

மெல்ல நகர்கிறது இரவு...

 நீ என்னோடு பேசாத பொழுதுகளின் கனம் செறிந்த கணங்கள் இரவை அழுத்த சுமை தாளாமல் மெல்ல நகர்கிறது இரவு...

அன்பை மட்டுமே விதைப்போம்...

வாழ்க்கை நிலம்போல... ஒன்றை விதைக்க ஓராயிரம் விளையும்... அன்பை விதைப்போம்... அன்பை மட்டுமே விதைப்போம்...

சமநிலை தவறுவதில்லை என் இரவு...

 இரவுத் தராசின் ஒரு தட்டு உன் நினைவுகள் ஏறிக்கொள்வதால் கீழிறங்க மற்றொரு தட்டில் கனவுகள் ஏறி மேலிழுக்க சமநிலை தவறுவதில்லை என் இரவு...

உறங்குவதெப்படி தெரியவில்லை...

 இதோ இரவு மலர்கிறது... உன் நினைவுத் தேனீக்களின் ரீங்காரத்திற்கிடையே உறங்குவதெப்படி தெரியவில்லை...

ஊட்டுகிறது இரவு...

வாய்நிறைய உணவு சுமந்து கூடுதிரும்பும் தாய்ப்பறவை வயிறுநிறைய குஞ்சுகளுக்கு ஊட்டுவதைபோல உன் நினைவுகளை கனவுகளுக்கு ஊட்டுகிறது இரவு...

என் உறக்கம்தான்..

 மண் கிளறும் கோழியென மனம் கிளறும் உன் நினைவுகள்... காயப்பட்டுப் போவதென்னவோ என் உறக்கம்தான்...

ஒளிர்கிறது நிலவு...

 இரு கைகளில் மையள்ளி முகம் பூசிய மழலையென இரவு வானம்... புன்னகையென ஒளிர்கிறது நிலவு...

கனவுகள் இசையாக...

 விரல்கள் தொட்டிழுக்க அதிரும் வீணையின் தந்தியென உன் நினைவுகள் வருடும்போது அதிரும் உறக்கத்தில் சிதறுகின்றன கனவுகள் இசையாக...

துணிவதில்லை ஆலமரம்...

வேர்களை மட்டுமே நம்பி விரிந்து படரத் துணிவதில்லை ஆலமரம்...

கண்ணீரில் சுவர் கரையும்...

 மௌனச் சுவரின் இருபுறமும் நீயும் நானும் நிற்கும்போது சுவரின் கண்ணீரில் சுவர் கரையும்...

தொடுவதில்லை வெளிச்சம்...

 சிறு குட்டையில் தேங்கிய நீரில் பாசி படர்ந்தபின் அடியாழம் தொடுவதில்லை வெளிச்சம்...

சத்தங்கள் மறக்கின்றன..

 பறவைகளின் கீச்சொலி தொலைத்த மரங்களில் இலைகளும் கிளைகளும் சத்தங்கள் மறக்கின்றன..

என் உறக்கம்...

 நீ இல்லாத பகல்களில் இதயத்தில் உலவும் உன் நினைவுகள் இரவானதும் இமைகளுக்குள் இடம்பெயர இடமின்றி இறங்குகிறது என் உறக்கம்...

நிரப்பாமலா விடப்போகிறாய்...

என்னிலிருந்து நீ தள்ளி இருப்பதால் என்னதான் மாறிவிடப் போகிறது... பகல்களை உன் நினைவுகளாலும் இரவுகளை உன் கனவுகளாலும் நிரப்பாமலா விடப்போகிறாய்...

ரசிக்கும்போதே...

 வழலைக் குமிழியென வண்ணங்களை எதிரொளித்தவாறே பறக்கும் வாழ்க்கை ரசிக்கும்போதே உடைந்து போகிறது...

பாவம் நீ...

 உன் நினைவுகள் என் பக்கமாக திரும்புவதைத் தடுக்க ஏதேதோ செய்கிறாய் பாவம் நீ... காற்றிழுத்து கயிற்றில் கட்டுகிறாய்..

வரையத் தவறுவதில்லை...

 என் இரவுகளின் முற்றத்தில் கனவுகளை வண்ணக் கோலங்களாக வரையத் தவறுவதில்லை உன் நினைவுகள்...

தமிழ்த் திமிர்...

 வாடிவாசல் கடந்து வால் சுழற்றி சினம் தெறிக்க சீறிவரும் காளைகளின் கூர்கொம்பு தாண்டி திமிலணைக்கக் குவிந்திருக்கும் கூட்டத்தில் செறிந்திருக்கிறது தமிழ்த் திமிர்... #என்றும் வீழோம்👍🏻

தீ வைக்கிறது இரவு...

 அகலில் தளும்பும் எண்ணெயில் நனைந்த பஞ்சுத்திரியென உன் நினைவுகளில் ஊறிக்கிடக்கும் உள்ளத்தில் மெல்லத் தீ வைக்கிறது இரவு...

உடையாதிரு மனமே...

 கடலில் மிதக்கும் கலமும் மூழ்கித்தான் போகிறது உடைந்த பிறகு... உடையாதிரு மனமே...

இமைகள்...

 உன் நினைவுகளுக்கும் கனவுகளுக்கும் இடையே எல்லைக்கோடாக மாறிப்போகின்றன இமைகள்...

நதியின் தாகம்...

 அல்லும் பகலும் அடர்ந்து பெய்யும் மழையின் பெருக்கில் அணைகள் தாண்டும் நீரின் வேகத்தில் தணிகிறது நதியின் தாகம்...

இழுத்துச் செல்கிறாய்...

 கரைதொட்டுத் திரும்பும் கடலலைகள் காலடி மணலை அரித்துச் செல்வதுபோல நீ ஒவ்வொருமுறை பார்த்துத் திரும்பும்போதும் இழுத்துச் செல்கிறாய் என் மனதை...

காலணியின் தேவை மட்டுமா...??

 காலாற புல்வெளியில் நடக்கும்போது நறுக்கென காலில் குத்தும் முள்ளொன்று சொல்லுவது காலணியின் தேவை மட்டுமா...??

விதைக்கிறாய்...

 இதென்ன உன் நினைவுகள் மேகங்களாகத் திரள்கின்றன... மின்னல்களாக ஒளிர்கின்றன... பெருமழையாய் பொழிகின்றன... நீயோ சேறாகிப்போன மனதில் ஏரோட்டி உன் நினைவுகளையே விதைக்கிறாய்...

சுமந்துகொண்டு...

 நோவாவின் பேழையாகிறது மனது... முழுவதுமாக உன் நினைவுகளைச் சுமந்தபடி... பேரூழிக்காலத்திற்கு பின்னரும் பேழை இருக்கும்... புதிய உலகிலும் உன் நினைவுகளையே சுமந்துகொண்டு...

வேண்டிக்கொண்டு..

 இப்போதெல்லாம் அரிதாகவே புன்னகைக்கிறாய் நீ... பாலைவனத்தின் நீர்ச்சுனை போல... ஒட்டகம் போல உள்ளிழுக்கிறேன் நான்... அடுத்த சுனை அருகிலிருக்க வேண்டிக்கொண்டு..

மூச்சுத்திணறுகிறது தன்மானம்...

 பேரன்பின் பிடியில் சிக்கும்போது சிலநேரங்களில் மூச்சுத்திணறுகிறது தன்மானம்...

என் கண்கள் விழிக்கும்வரை..

 உன் நினைவுகள் சுற்றித் திரிகின்றன பட்டாம்பூச்சிகளின் கூட்டம்போல... இறக்கைகளின் ஒவ்வொரு அசைவிலும் நிறங்கள் உதிர வண்ணங்களின் கலவையாகிறது இரவு... என் கண்கள் விழிக்கும்வரை...

காதுகள் கேட்பதேயில்லை...

 காற்று சுமந்து நிற்கும் கதைகளின் உண்மைகளை காதுகள் கேட்பதேயில்லை...

உன் நினைவுகள்...

 இளைப்பாற இடமின்றி நெடுந்தூரம் வலசை போகும் பறவைகள் இறங்கியதும் இரை தேடுவதுபோல என் உறக்கம் தேடும் உன் நினைவுகள்...

எழுதுகோல்...

 ஞாலம் உயர்த்தும் நெம்புகோல் நல்லதை மட்டும் நாளும் எழுதும் எழுதுகோல்...

சிதைந்து போகின்றது பாவம்...

 பெருவெடிப்பை அடுத்த நுண்நொடியில் பேரண்டம் விரிந்த வேகத்தில் விழுகின்றன உன் நினைவுகள்... சிலந்திவலை உறக்கம் சிதைந்து போகின்றது பாவம்...

கிணற்றுத்தவளை..

 கடலுண்டு என்று சொன்னேன் கற்பனைக்கு அளவில்லையென நகைக்கிறது கிணற்றுத்தவளை..

இரண்டுமே யுகங்கள்தான்...

 என்னிடமிருந்து தள்ளி நிற்பதென்று நீ முடிவெடுத்தபின் மணித்துளிகளுக்கும் மாதங்களுக்கும் வேறுபாடுகளேதும் விளங்கவில்லை எனக்கு... இரண்டுமே யுகங்கள்தான்...

கருகும் கனவுகள்...

 மனதின் வலி சுமந்து வழியும் விழிநீரின் வெப்பத்தில் கருகும் கனவுகள்...

தடுமாறும் கனவுகள்...

 உள்ளுக்குள் ஊறும் போதை நீ... பொழுதுகள் தவறாமல் பருகுகிறேன் நான்... சாய்ந்த பொழுதில் தளர்ந்த இரவில் தள்ளாடும் உறக்கத்தின்மேல் தடுமாறும் கனவுகள்...

இலக்கணம் சொல்லும் செடிகள்...

 வாடிய பூக்கள் உதிரும்போது வருந்துவதுமில்லை... புதிய மொட்டுக்கள் முகிழ்க்கும்போது மகிழ்வதுமில்லை... துறவின் இலக்கணம் சொல்லும் செடிகள்...

உன் நினைவுகள்....

 எத்தனைமுறை விரட்டினாலும் மீண்டும் மீண்டும் காதோரம் ரீங்காரமிடும் சிறுபூச்சியைப்போல என் உறக்கத்தைச் சுற்றும் உன் நினைவுகள்....

வாடுவதில்லை நிலம்...

வாடையும் கோடையும் வந்து வந்து போனாலும் வாடுவதில்லை நிலம்... சிறுமழை உண்டபோதும் செழிக்கிறது...

புதிதாக விடியட்டும்...

 முகத்தின் புன்னகையை மூடிவைத்த மோசமான நாட்கள் முடியட்டும்... கொஞ்ச வரும் குழந்தையைக்கூட சட்டெனக் தூக்கத் தயங்கிய துயரமான கணங்கள் முடியட்டும்... விரிந்த வெளியிருக்க வீடே சிறையாகிப்போன வேதனை நாட்கள் முடியட்டும்... எதிர்வரும் ஆண்டில் இறையருளால் இன்னல்கள் நீங்கி இன்பங்கள் பெருகி புதிதாக விடியட்டும்...

ஏனிந்த கோரப்பசி...

 உன் நினைவுகளுக்கு ஏனிந்த கோரப்பசி... ஒவ்வொரு நாளும் என் உறக்கம் தின்று செரிந்து கனவு ஏப்பங்களை காற்றில் கலக்கிறது...

பறக்கத் தொடங்குகிறேன்...

 என் தேடல்களின் பாதைகளெங்கும் பாறைகளால் மூடுகிறது வாழ்க்கை... பறக்கத் தொடங்குகிறேன் நான்...

பயணிக்கின்றன கனவுகள்...

 இடறாத உன் நினைவுகளில் பாதம் பதித்து இரவின் சரிவில் இறங்குகிறேன் ஒரு யானைபோல... என் மேல் பயணிக்கின்றன கனவுகள்...

பயணிக்கின்றன கனவுகள்...

 இரவின் சரிவில் இறங்குகிறேன் ஒரு யானைபோல... இடறாத உன் நினைவுகளில் பாதம் பதித்து... என் மேல் பயணிக்கின்றன கனவுகள்...

வேறென்ன இருக்கமுடியும்...

 இழந்த பொழுதுகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் மகிழ்ச்சியின் சிறுதுகள்களைத் தேடிச் சேகரிக்க சிறந்த இடம் கனவின்றி வேறென்ன இருக்கமுடியும்...

வழுக்குகிறேன் நான்...

 தொடர்மழையில் நனைந்த தரையில் பாசி போலவே நீ... நொடியில் நூறுமுறை வழுக்குகிறேன் நான்...

களைகிறேன்...

 பெருங்காடென விரிகிறது வாழ்வு... சிறு தீப்பொறியென தெறிக்கிறது சினம்... சினம் களைய இயலாமல் காய்ந்ததைக் களைகிறேன்...

இறங்குகிறாய்...

 சரிவுகளில் இறங்கும் நீர்போலவே என்னுள் நீ இறங்குகிறாய்... நெஞ்சினுள் தேங்கும் உன் நினைவுகளில் கனவலைகள் மட்டுமே சலனங்கள்...

ஒட்டிக்கொள்கிறது...

 குளிரள்ளி வீசும் காற்றில் நடுங்காமலிருக்க இருளோடு ஒட்டிக்கொள்கிறது இரவு..

பருகுகின்றன என்னை...

 பனித்துளிக்குள் சிறைப்பட்ட பரிதி பனித்துளியை உறிஞ்சுவதுபோல உன் நினைவுகளும் பருகுகின்றன என்னை...

இப்போதும்...

 என் இரவுகளை எடுத்து மைதீட்டுகிறாய்... என் பகல்களை எடுத்து முகம் ஒற்றுகிறாய்... நாட்களையெல்லாம் நீ எடுத்துக்கொண்டபின் நானெப்படி அகவைகளைக் கடப்பது... உன்னைப் பார்த்த நாளில்தான் நிற்கிறேன் இப்போதும்...

மெல்ல நழுவுகிறது

 இரை விழுங்கிய பாம்பு போல நாளிலிருந்து மெல்ல நழுவுகிறது இரவு வயிற்றுக்குள் என் உறக்கம் சுமந்துகொண்டு...

நீ மட்டுமே...

 நினைவுகளின் தொகுப்புதான் நானெனில் நானென்பது நீ மட்டுமே...

விழித்தே கிடக்கிறது...

 விழிகளுக்குள் உன்னைப் பொதிந்து என்னில் எறிந்து செல்கிறாய்... இதயமெல்லாம் கண்களாகி இரவும் பகலும் விழித்தே கிடக்கிறது...

என்ன செய்வது...

 அனலருகே மெழுகை வைத்துவிட்டு உருகாமல் பார்த்துக்கொள்ள சொல்லுகிறது வாழ்க்கை... எரியும் விரல்களை என்ன செய்வது...