மனசாட்சி...

மாட்டு மந்தைகளுக்கு
மனசாட்சி அவசியமில்லை...
புண்ணாக்கும் புல்லுக்கட்டும்
பருத்திக்கொட்டையும்
பானையில் கழுநீரும்
பாங்காய் வைத்துவிட்டு
பாலோடு ரத்தமும்
கறப்பவர் கைகளில்
கறை இருந்தாலென்ன
இல்லாவிட்டாலென்ன...
எனவே
மாட்டு மந்தைகளுக்கு
மனசாட்சி அவசியமில்லை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...