காத்திருக்கிறது காடு...

மறைந்திருக்கிறது விதை
மண்ணுக்குள்...
புதைந்ததென்று பேசுவார்
கோடரிக்காரர்...
கால்களுக்கு கீழே
காத்திருக்கிறது
பெருங்காடு...
கண்ணற்றவர்
கட்டைகள் சுமந்து
சிரிக்கிறார்...
விழுங்கும் காலத்திற்கு
காத்திருக்கிறது
காடு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...