Posts

பூக்காத செடிகளுக்கு...

 நித்தமும் என் நினைவுகளைக் கொய்து நீ சூடிக்கொண்டு பூக்காத செடிகளுக்கு நீரூற்றுகிறாய்...

அதே மின்னல்...

 பேரண்டத்தின் விதிகள் சற்றே பிசகிய கணமொன்றில் இணையண்டத்தில் நான் நழுவ அங்கும் என்னைக் கடக்கும் உன் கண்களில் அதே மின்னல்...

இரவுகளிலும் பகல்களிலும்...

 உன் நினைவுகளை அடை காக்கிறேன் இரவுகளிலும் பகல்களிலும்... கூட்டுக்குள் சிறையிருந்து அடைகாக்கும் இருவாட்சி பறவையைப் போல...

வெளுக்கிறது கிழக்கு...

 வெளிச்சம் சுமந்து வரும் நொடிகள் இருளில் தடுமாறி இரவின்மேல் விழ வெளுக்கிறது கிழக்கு...

என் உறக்கம்...

 வளைக்கு வெளியே கிளையொன்றில் அமர்ந்திருக்கும் ஆந்தையை அறியாமல் இருளை நம்பி வெளிவரும் எலியென என் உறக்கம்... இரவில் அமர்ந்திருக்கிறது உன் நினைவு...

தூரத்தையல்ல...

 உருளத் தொடங்கிய சக்கரம் நகர்ந்து நகர்ந்து கடந்தது தூரத்தையல்ல காலத்தை...

உறக்கத்தில் மட்டும்...

 விழிப்பில் தொடங்கி உறக்கத்திற்கு முன்புவரை நானாக இருக்கிறேன் நான்... உறக்கத்தில் மட்டும் நானாக இருக்கிறாய் நீ...