Posts

என்ன சொல்லிவிடமுடியும்...

பகலின் வெளிச்சத்தில் கண்களிரண்டையும் இறுக மூடிக்கொண்டு இருளெனப் பிதற்றுபவருக்கு இரவில் மட்டும் என்ன சொல்லிவிடமுடியும்...

இரவு...

நீ நினைவுகளுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறாய்... நான் கனவுகளின் ஒளியில் தேடுகிறேன்... ஓசைகளின்றி பார்த்துக்கொண்டிருக்கிறது இரவு...

என் தவறுதான்...

உண்மை ஒளிரும் பரிதியைப்போல என்றேன்... பகடிக்கு ஆளானேன்... என் தவறுதான் ஆந்தைகளிடம் சொன்னது...

இமைகளுக்குள் கசிக்கிறாய்...

பெருமலையின் சரிவுகளிடையே தேங்கிய நீர் கரும்பாறையில் கசிவதைப்போல என் எண்ணங்களில் தேங்கிய நீ இமைகளுக்குள் கசிக்கிறாய் கனவுகளாக...

அருகில் செல்லும்வரை தெரிவதில்லை...

ஒளியும் நிழலும் கோலமிடும் சாலையில் அருகில் செல்லும்வரை தெரிவதில்லை குழிகள்...

நீ விட்டுச்சென்ற புன்னகையுடன்...

ஓரிரு சொற்களுடன் நீ கடந்துவிட்டாய்... நான் நெடுநேரமாய் பேசிக்கொண்டிருக்கிறேன் நீ விட்டுச்சென்ற புன்னகையுடன்...

என் நண்பர்கள்...

திங்களில் பாதி வளர்ந்து திங்களில் மீதி தேய்ந்திடும் திங்களென ஒருவேளை நான் இருக்கக்கூடும்... ஆனாலும் என் நண்பர்கள் எப்போதும் வானமே...