வீர மகளிர்...
புலியை முறத்தாலடித்து
பெண்ணொருத்தி
விரட்டினாள் என்பதையும்
போர்க்களத்தில்
மார்பில் வேல்வாங்கி
வீழ்ந்தான் கணவன்
என்றபின்னும்
தயக்கமேயின்றி
தனயன் கையில்
வாள் கொடுத்து
களம் அனுப்பிய
தாயையும் பதிவுசெய்த
எங்கள் இலக்கியங்களைப்
பொய்யென்றும் புனைவென்றும்
பேசியவர் வாயடைக்க
திருத்தணி தொடங்கி
தென்குமரி வரை
களமாடும்
வீர மகளிரை
வணங்குகிறேன்
ஈர விழிகளோடு...
பெண்ணொருத்தி
விரட்டினாள் என்பதையும்
போர்க்களத்தில்
மார்பில் வேல்வாங்கி
வீழ்ந்தான் கணவன்
என்றபின்னும்
தயக்கமேயின்றி
தனயன் கையில்
வாள் கொடுத்து
களம் அனுப்பிய
தாயையும் பதிவுசெய்த
எங்கள் இலக்கியங்களைப்
பொய்யென்றும் புனைவென்றும்
பேசியவர் வாயடைக்க
திருத்தணி தொடங்கி
தென்குமரி வரை
களமாடும்
வீர மகளிரை
வணங்குகிறேன்
ஈர விழிகளோடு...
Comments
Post a Comment