அப்பா...

ஏனோ தெரியவில்லை
எல்லா அப்பாக்களும்
கனிவு முகத்தில்
கண்டிப்பு முகமூடி
அணிந்து கொள்கின்றனர்...
கண்களில் வழியும்
கண்ணீர் துடைக்காத
விரல்கள்
கன்னத்தில்
கண்ணீர்த்தடம் வருடும்...

உறங்கிய பின்...

காயத்தில் செந்நீர் வழிய
வலித்து நிற்கையில்
திட்டிய உதடுகள்
ஒட்டி முத்தமிடும்...

உறங்கிய பின்...

இப்போதும்
கன்னங்களில்
கண்ணீர்த்தடம் இருக்கிறது...

காயங்களில்
செங்குருதி சிந்துகிறது...

வருடும் விரல்களும்
வாஞ்சையாய்
முத்தமிடும் உதடுகளும்
வரட்டுமென்றே உறங்குகிறேன்...

கனவுகளிலேனும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...